தமிழ் மக்கள் தங்கள் மதமாக வைத்து வழங்கி வருவது ஆரிய மதமாகிய இந்து மதமாகும். இவ் இந்து மதம் தமிழ் நாட்டில் பரவிய காலம் ஆரியர்கள் நம்நாட்டில் வந்து குடியேறிய காலத்தைக் குறிப்பதாகும். அதற்குமுன் இந்துமதம் தமிழரிடம் இருந்ததற்கு சான்றுகள் இல்லை. ஆகையால் ஆரிய மதமாகிய இந்து மதத்தை தமிழ் மக்களுடைய மதமென்றுகூற ஆராய்ச்சித்துறை கண்டஅறிவுடைய எவரும் முன்வரமாட்டார்கள் என்பது துணிபு. ஆரியர் தமிழரிடையே புகமுன்பே பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சிறந்த நாகரீக வாழ்க்கையை செம்மை நெறியில் ஒழுகிவந்தனர். இடைக்காலத்தில் ஆரியர்களால் கொண்டு புகுத்தப்பட்ட இந்து மதம் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல என்பதை விளக்கவே இக்கட்டுரை கருவாகின்றது.