குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2056

இன்று 2025, ஆடி(கடகம்) 18 ம் திகதி வெள்ளிக் கிழமை .

கட்டுரைகள்

கோள்களின் பெயர்க்காரணமும் பூவுலகும் இரா.திருமாவளவன் மலேசியா...

21.11.2024....தி.ஆ.2055......பண்டைத் தமிழர் தம் நுண்மாண் நுழைபுல அறிவால் ஆழமாக ஆய்வு செய்து, தமிழ் மொழியின் சொற்களை அறிவியல் சொற்களாகவே அமைத்துள்ளனர். தமிழ்ச் சொற்கள் உணர்த்தும் மெய்ப்பொருளும், அறிவியல் உண்மைகளும் சிந்திக்கச் சிந்திக்க நம்மை வியப்பில் ஆழ்த்து கின்றன. புதிய அறிவியல் காலத்தில் மேலை நாட்டு அறிவியலாளர்களின் கண்டுபிடிப்புகள் கூறும் அறிவியல் கருத்துருக்கள் (concept) பலவற்றை முன்னரே பண்டைத்தமிழர் கண்டறிந்துள்ளனர்.

மேலும் வாசிக்க...
 

1951-ம் ஆண்டு திருச்சி வானொலியில் ‘என் கணவர்' என்ற தலைப்பில் திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை.

13.09.2024 .....பாரதியாக இருப்பதை விட செல்லம்மாள் பாரதியாக இருப்பது எவ்வளவு வலி மிகுந்தது?

பாரதியின் நினைவு  நாளையொட்டிய பதிவு...

இன்று பாரதியைப் பற்றி பலரும் பலவிதமாக விமர்சனம் செய்கிறார்கள்.

பாரதியின் மனைவி செய்த விமர்சனம் இதோ!

1951-ம் ஆண்டு திருச்சி வானொலியில் ‘என் கணவர்' என்ற தலைப்பில் திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை. ஒருவரைப்பற்றி மற்றவர் சொல்வது  மெடைக்கானது சபைக்கானது. நுாலில்  எழுதுவது பொது வெளிக்கானது  அதில் ஒரு பொது முறைவந்துவிடும் உண்மைகள் சற்று மறையலாம்! தன்கணவரைப்பற்றி மனவிசொல்வது உணர்ந்து சொல்லும் உண்மைகள் அதில் இருக்கும் அதனால்ொ இன்று 150 ஆண்டுகளாகும்போதே  பாரதியாரின் சில உண்ணமைகளை  உணர்ந்தேன்!

மேலும் வாசிக்க...
 

எந்த உலகத்தில் வாழ்கின்றோம் செப்டம்பர் 27, 2023 அ.ராமசாமி எழுத்துகள்

குமரிநாட்டு .கொம்இல்...25.05.2024....தினசரிப் பேச்சில் பழமொழிகளின் பயன்பாடு அர்த்ததோடு இருப்பதும் உண்டு. அர்த்தமில்லாமல் இருப்பதும் உண்டு. ‘ கெட்டும் பட்டணம் சேர்’ என்ற பழமொழி மிகக்கூடுதலான அர்த்தத்தோடு பயன்பாட்டில் இருந்து கொண்டிருக்கும் பழமொழி என்றே இதுவரை நாம் கருதிக் கொண்டிருக்கிறோம்.சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு போன்ற பெருநகரங்களில் வாழ்பவர்கள் அடிக்கடி சொல்லிக் கொள்ளும் பழமொழியாக இது இருக்கிறது.

மேலும் வாசிக்க...
 

தமிழி எழுத்துக்கள்...05.04.2024.....

05.04.2024......எப்போதும் போல் தமிழர்களின் பழமைக்குச் சான்றாவணமாக இருப்பது சங்க இலக்கியம்தானே... பழந்தமிழர்கள் கல்வியறிவும் எழுத்தறிவும் பெற்றிருந்தனர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அவர்கள் எழுதிய எழுத்துக்கு ஏதேனும் பெயர் உண்டா.? சங்க இலக்கியம் சான்று தருகிறதா..?ஆம்.. சான்று உள்ளது. பழந்தமிழர்கள் குயிலி என்னும் எழுத்து முறையில் எழுதியதாக அகநானூறு பாடல் ஒன்று கூறுகிறது.
மேலும் வாசிக்க...
 

ஈழத்தமிழர்களின்_நாகநாடு கட்டுரையாளர் வேள்நாகன்! (கி.மு.1000_தொடக்கம்_கி.பி.13 வரை)

29.03.2025 தி.ஆ .20255.....நாகர்கள் என்போர் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் ஈழம்  முதல் இமயமலை பரியந்தம் வரையிலும் மேற்கில் மொகஞ்சதாரோ-க(ஹ)ரப்பா முதல், கிழக்கில் மேகாலயா - நாகாலாந்து வரையிலும், சாவகம் உள்ளிட்ட பெருநிலப் பரப்பில் வாழ்ந்த தமிழர் என்றும், இவர்களுக்கு ‘நாகர்கள்’ என்ற பெயரும் உண்டு என்றும், இவர்களின் தாய்மொழி ‘தமிழ்ர்கள்’ என்று அண்ணல் அம்பேத்கர் குறிப்பிடுகிறார். 

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1 - மொத்தம் 167 இல்