உள்வீட்டுக்காரர் எதிர்வீட்டுக்காரர் ஆகி இரண்டுபட்டதால் புதுமாத்தாளன் மூடுமந்திரத்தின் முடிச்சு அவிழ்ந்தது சரத்பொன்சேகா திருவாய்திறந்தார்.
கிராமப்புறத்து தோட்டங்களில் குரங்குகாவல் முறையை ஊரவர்கள் கையாள்வார்கள்.
தேங்காய்ச்சிரட்டையில் மிளகாய்ப்பொடி அருகருகே அய்ந்து ஆறு கொட்டன்கள் போட்டுவிடுவார்கள்.
குரங்குகள் இறங்கிவந்து மிளகாய்ப்பொடியை கையில்பிரட்டும் அகோரமாய் எரிவு உண்டாகும்... அதே கையால் தங்கள் கண்களில் மூஞ்சையில் பின்பகுதியில் நாக்கில் பிரட்டிவிட்டு கோபங்கொண்டு கொட்டன்களை எடுத்து தங்களுக்கு தாங்களே அடிபட்டுச் செத்துப்போகும் எந்தச்செலவும் இல்லாது தோட்டக்காவல் நிகழ்ந்துவிடும்.