குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 1 ம் திகதி புதன் கிழமை .

தாயக செய்திகள்

இலங்கை படுகொலை ஒளிநாடா உண்மையானது என்று ஐ நா அதிகாரி கருத்து

இலங்கை படையினர் சட்ட விரோதமாக கொலைகளில் ஈடுபடுவதாகக் காட்டும் ஒளிநாடாக் காட்சிகள், பெரும்பாலும் உண்மையானவையே என்று ஐ நாவின் மூத்த அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

யாழ் உயர் பாதுகாப்பு வலயங்களில் மக்கள் குடியேற்றப்படுவார்கள் என்று பசில் ராஜபக்ஷ அறிவிப்பு

 பசில் ராஜபக்ஷ யாழ்ப்பாணத்தில் உள்ள உயர் பாதுகாப்பு வலயப் பகுதிகளில் 75 வீதமானவற்றில் மக்கள் விரைவில் குடியேற்றப்படுவார்கள் என்று வடக்கு செயலணிக்குழுவின் தலைவரும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.

இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 10 ஆம் திகதி யாழ்ப்பானத்தில் அறிவிப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

காணாமல் போனவர்களின் பெற்றோர் ஆர்ப்பாட்டம்

காணாமல் போனவர்களின் பெற்றோர் சிலர்இலங்கையின் வடக்கே வவுனியாவில், இன்று கூடிய காணாமல் போனோரின் பெற்றோர் தமது பிள்ளைகளைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.

வவுனியா நகர மணிக்கூட்டுச் சந்தியில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தாய்மார்கள் பலரும் தமது பிள்ளைகளின் உருவப்படங்களைக் கைகளில் ஏந்தியவாறு வாய்விட்டு அழுதவண்ணம் இருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.

மேலும் வாசிக்க...
 

ஆட்சி மாற்றத்துக்கு மக்களைக் கோர கூட்டமைப்பு நேற்று ஏகமனதாக முடிவு

அதற்காக பொன்சேகாவை ஆதரிக்கவும் தீர்மானம்

தமது ஆட்சியை நீடிப்பதற்கு மீண்டும் ஆணை தருமாறு தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று தீர்மானித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அதற்காக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக இந்தத் தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிக்கும்படி தமிழ் மக்களைக் கோருவது என்று நேற்று ஏகமனதாக முடிவு செய்தது. தமிழ்க் கூட்டமைப்பு இன்று காலை பத்திரிகையாளர் மாநாடு ஒன்றை நடத்தி அங்கு ஓர் அறிக்கையை வெளியிட்டுத் தனது முடிவை அறிவிக்கும் எனவும் தெரியவந்தது.

மேலும் வாசிக்க...
 

காத்தான்குடியில் பொன்சேகா பிரச்சாரம்

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் எதிர் கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கை சிங்களவர்களுக்கு மாத்திரம் சொந்தமானது என எந்தவொரு வெளி நாட்டு ஊடகத்திற்கும் தான் கருத்து தெரிவிக்கவில்லை என பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு காத்தான்குடியில் செவ்வாய் மாலை நடை பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனை தெரிவித்துள்ள அவர், தனது கருத்து அந்த ஊடகத்தில் திரிபு படுத்தப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

மேலும் வாசிக்க...
 

3தொடக்கம் 4இலட்சம் வாக்கு வெற்றிதோல்வியைத் தீர்மானிக்கும்..சரத்தா??மகிந்தவா??

1. வடக்கு, கிழக்கு வாக்குகள் இத்தேர்தலில் பிரியும் (அதிகாரம் பிரதேசவாதம் சலுகைகள்)  கருணா.. பிள்ளையான்.. டக்ளசு..
காரணமாக வெற்றிலைக்கு சாதகம்.

2. இன உணர்வான வாக்குகளும் இழப்புக்களுடன் தொடர்பான வாக்குகளும் அன்னத்துக்கு சாதகம். மேற்குறிப்பிட்ட விதத்தில் எவர் அதிக வாக்கு பெறுவாரோ அவருக்கே வெற்றி சாத்தியம்...அத்துடன்..

3. சிதையாத மலையக வாக்குகளையும் அதிகம் பெறுபவரே வெற்றி பெறுவார்.

4. சிங்கள மக்களின் வாக்குகள் தமிழர்களை வென்ற இரு மன்னர்களுக்கும் சரி பாதி செல்லும்.

5. இடம்பெயர்ந்து சிங்கள இடங்களில் வாழும் மக்கள் யாருக்கு வாக்களிக்கின்றார்களோ அவர்களுக்கே வெற்றி சாத்தியம் இதை ரணில்.. சரத்.. மணோகணேசன் கவனத்தில் கொள்ளவேண்டும். இருபது நாட்களில் இலங்கைத்தமிழரின்  தலைவிதி தீர்மானிக்கப்படும்.

6.கண்டி கொழும்பு சிங்களமக்களின் வாக்குகள் அன்னத்திற்கு.. பிறமாவட்டத்தில் வாழும் தமிழர்களின் வாக்கு பயத்தாலும் சலுகைக்காகவும் வெற்றிலைக்கு போகலாம். இவ்வாக்குகளையும் அன்னம் பெற்றாலே சரத் வெல்லலாம்
தமிழர்வாக்கு -  கொழும்பு = வவுனியா
                          மட்டக்களப்பு = யாழ்ப்பாணம்

 

பாரிய மன அழுத்தத்தில் மஹிந்த ராஜபக்ச

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தற்போது மருத்துவ ஆலோசனைகளைப் பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே அவர் பாரிய மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் இது மீண்டும் பாரிய பிரச்சினையை தோற்றுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடுமையான அழுத்தம், தோல்வியை எதிர்நோக்கிய அச்சம், மற்றும் கண் விழித்தல் என்பன இதற்கான காரணங்களாக கூறப்படுகிறது.

மேலும் வாசிக்க...
 

போரில் பங்கேற்றவர்களுக்கு பொதுமன்னிப்பு: சரத் பொன்சேகா வாக்குறுதி

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தான் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், போரில் ஈடுபட்டதாகத் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அனைவருக்கும் ஒரு பொது மன்னிப்பு என்ற அடிப்படையில் மறு வாழ்வு அளிக்கப்போவதாக பிரதான எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் ஓய்வு பெற்ற ராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா உறுதியளித்துள்ளார்.

திங்களன்று தன்னைச் சந்தித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் சரத் பொன்சேகா வழங்கிய ஆவணத்தில் இந்த உறுதி மொழி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 

அவசரகால காலசட்டம் உயர்பாதுகாப்பு வலயங்கள் நீக்கப்படும், பலாலி சர்வதேச விமான நிலையமாக மாறும் - யாழ்ப்பாணத்தில் சரத் பொன்சேகா

ஜனாதிபதி பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா இவற்றை நேற்று யாழ்ப்பாணத்தில் வைத்துத் தெரிவித்தார். நேற்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட சரத் பொன்சேகா பல்வேறு நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் நேற்று மாலை 7 மணியளவில் யாழ்பாடி ஹோட்டலில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை நடத்தினார்.

அந்த மாநாட்டில் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப்ஹக்கீம், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன், எம்.பி.க்களான ஜயலத் ஜயவர்த்தன, ரவிகருணா நாயக்க,அனுரகுமார திஸநாயக்க, அர்ஜீண ரணதுங்க, அகிலவிராஜ் காரியவாசம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் வாசிக்க...
 

சிறிலங்கா அரசுக்கெதிரான போர்குற்றச்சாட்டு செய்மதி படச்சான்றுகளுடன் சமர்ப்பிக்கபடவுள்ளது

சிறிலங்கா அரசாங்கம் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதற்கான செய்மதி படங்களுடனான சான்றுகள் அமெரிக்காவை தளமாகக்கொண்ட குழுவினால் சர்வதேச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அமெரிக்காவை தளமாகக்கொண்ட தமிழர் படுகொலைகளுக்கு எதிரான அமைப்பு இந்த முனைப்பில் ஈடுபட்டுள்ளது.எதிர்வரும் 14 ஆம் 15 ஆம் திகதிகளில் டப்ளினில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றம் கூடவுள்ளது.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1143 - மொத்தம் 1147 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.