மார்ச் 18, 2011....குமரிநாட்டில் 11.02.2024 இல் ஏற்றப்படுகின்றது. எமது இடைச்செருகலாக இது யாழ் குமுகாயநிலை பற்றி இதனுாடே விளங்கிக்கொள்ளல் அறிவியல்சார் பார்வையாகும்!
நமது காலம் ஊடகங்களின் காலம். பொருளாதார அடித்தளத்தின் பேரால் குமுகாயக்கட்டமைப்பை(சமூகக்கட்டமைப்பை) வரையறை செய்யும் மார்க்சியச் குமுகவியலாளர்கள் (சமூகவியலாளர்கள்) கூட 2000- க்கு முன்னும் பின்னுமான இருபதாண்டுகாலக்(குமுகாக்கட்டமைப்பை) சமூகக் கட்டமைப்பைத் தகவல் சமூகம் (Information society) என்றே வரையறை செய்கின்றனர் . நகரம் மற்றும் பெருநகர வாசிகள் ஊடகவலைப் பின்னலுக்குள் தன் விருப்பத்தோடு வந்து சேர்ந்து விட்டனர். கிராமம் மற்றும் சிறுநகரவாசிகள் அதன் பரப்பை நோக்கி இழுக்கப்படுகிறோம் என்பதை அறியாமலேயே நுழைந்து கொண்டிருக்கின்றனர்.