குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 24 ம் திகதி புதன் கிழமை .

கல்வி - அறிவியல்

முதலாம் உலகப்போரில் 3 கோடி மக்கள் மரணம்தரையிலிருந்து மின்னை உறிஞ்சி ஓடும் வாகனம் கண்டுபிடிப்பு

1914 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதியில் தொடங்கி, 1918 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் தேதி வரையிலான 1561 நாட்கள் முதலாம் உலகப் போர் நடந்தது. இதில் பன்னாட்டளவில் ஒரு  கோடி படை வீரர்களும், 2 கோடி பொது  மக்களும் இறந்தனர்.

தரையிலிருந்து மின்னை உறிஞ்சி ஓடும் வாகனம் கண்டுபிடிப்பு

தரைக்குக் கீழே பதிக்கப்பட்ட மின் கம்பிகளில் இருந்து மின்காந்த தூண்டு தல் மூலமாக மின்சாரத்தை உறிஞ்சி ஓடும் டிராம் வண்டி, தென்கொரியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தென் கொரிய தலைநகர் சியோலில் சியோல் கிராண்ட் பார்க் என்ற பொழுதுபோக்கு பூங்கா உள்ளது. மிகப் பெரிய ராட்டினம், ஓட்டல், நீச்சல் குளம் உள்பட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. பூங்காவை சுற்றிப் பார்க்க டீசல் ரயில் இயக்கப்பட்டு வந்தது.

டீசலுக்கு பதிலாக நவீன தொழில் நுட்பத்தில் மின்சார ரயில் இயக்குவது குறித்து கொரியா அறிவியல், தொழில் நுட்பக் கழகம் ஆய்வு நடத்தியது. மின் காந்த தூண்டுதல் முறையை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்த தொழில் நுட்பத்தில் இயங்குவதற்கான வாகனங்கள் உருவாக்கும் பணி கடந்த ஆண்டு நிறைவடைந்தது.

இதற்கு ஆன்லைன் எலக்ட்ரிக் வீக்கிள் (ஓஎல்இவி) என்று பெயரிடப் பட்டுள்ளது. இந்த டிராம் வண்டிக்கு தண்டவாளம் தேவையில்லை. 3 பெட்டிகள் இணைக்கப்பட்ட இது கார் போலவே ஓடும். பூங்கா முழுவதும் டிராம் செல்லும் தடத்தில் அடையாளத் துக்காக நீல நிற கோடு போடப்பட்டி ருக்கும். இந்த கோட்டுக்கு நேராக, தரைக்கு கீழே சுமார் ஒரு அடி ஆழத்தில் மின்சார கம்பிகள் செல்லும்.

அந்த வழியாக செல்லும்போது, மின்காந்த தூண்டுதல் விசையைப் பயன்படுத்தி, மின்சாரத்தை வாகனம் நேரடியாக உறிஞ்சிக் கொள்ளும். இதன்மூலம் இன்ஜின் இயக்கப்படும்.

இதுபற்றி இன்ஜினீயர்கள் கூறுகையில், பாதாள மின்கம்பியானது உயர்அழுத்த மின் கம்பியுடன் இணைக்கப்பட்டிருக்கும். அதனால், மின்சாரம் எப்போதும் தடை படாது. மின்காந்த தூண்டுதல் முறையில் மின்சாரம் உறிஞ்சப்படுவதால் மின்இழப்பு அவ்வளவாக இருக்காது. சொற்ப அளவே புகை வெளியாகும் என்பதால் சுற்றுச் சூழலுக்கு ஏற்றது என்கின்றனர்.

பூங்காவில் இந்த வாகனம் கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டின் டாப் 50 கண்டுபிடிப்புகளில் ஓஎல்இவி ஒன்று என்று டைம்ஸ் இதழ் கவுரவப்படுத்தி விருது அளித்தது குறிப்பிடத்தக்கது.

 

 

முன்தோன்றிய மூத்த கிருமி!

17.07.2011--புற்றுநோய்க் கிருமி செல்களின் வயது 60 கோடி ஆண்டுகள் இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் அறிந்து கூறியுள்ளனர். உலகில் பலகோடி ஆண்டுகளுக்கு முன்பே ஒரு செல் உயிரினம் தோன்றி விட்டது. 

மேலும் வாசிக்க...
 

நோக்கியா செல்போனில் எண்ணற்ற ஆப்ஸ் வசதிகள்

  06.08.2011--இரட்டை சிம் வசதி கொண்ட நோக்கியா சி 2 அண்டு 3 மற்றும் நோக்கியா சி2 அண்டு 06 ஆகிய செல்போன்களில் புதிய தொடுதிரை மற்றும் டைப்பிங் வசதி ஆகியவையும், இந்தி யாவுக்கு என்றே குறிப்பிட்ட 10 வகை ஆப்ஸ் வசதியும் உள்ளது.

மேலும் வாசிக்க...
 

நினைவாற்றலை மேம்படுத்துவது எப்படி?

“நினைவாற்றல் என்பது ஒரு திறமை. சரியில்லாத நினைவாற்றல் என்ற ஒன்று இல்லை. தக்க பயிற்சிகளின் மூலம் யாரும் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள முடியும்”.

நினைவாற்றல் நன்றாக இருப்பதற்கு ஆறு முக்கிய கோட்பாடுகள் காரணமாக இருக்கின்றன.

அவை:
1. தன்னம்பிக்கை 2. ஆர்வம் 3. செயல் ஊக்கம் 4. விழிப்புணர்வு
5. புரிந்துகொள்ளல் 6. உடல் நலம்.

இவை ஒவ்வொன்றைப் பற்றியும் சிறிது விளக்கமாகப் பார்க்கலாம்.

மேலும் வாசிக்க...
 

"சந்திரனில் தண்ணீர்" நாஸா அறிவிப்பு (வீடியோ இணைப்பு).

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா சமீபத்தில் நடத்திய ஆய்வுகளில், நிலவில் குறிப்பிடத்தக்க அளவு தண்ணீர் இருப்பது தெரியவந்துள்ளது.

பூமியின் துணைக்கோளான சந்திரனில் தண்ணீர் இருப்பதாக நாஸா ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நீண்டகாலமாக இந்த ஆராய்ச்சி இடம்பெற்றுவந்ததாகவும் அண்மைய ஆய்வுகளால் ஆதாரத்துடன் நிரூபிக்கக் கூடியதாக உள்ளதாகவும் அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 

2009 ல் உலகம் அழியும் : செவ்வாய் சிறுவன் சொல்கிறான் !!!

போரிஸ் கிப்ரியானோவிச் – இந்த சிறுவன் ரஷ்யாவில் மிகப் பிரபலம். செவ்வாயில் ஒருகாலத்தில் வசித்ததாகச் சொல்லும் இச் சிறுவன் சொல்லும் கதைகள் வியப்பூட்டுகின்றன.

எல்லோரையும் போல இயல்பாகவே 1996ல் பிறந்த போரிஸின் நடவடிக்கைகளில் ஏற்பட்ட அசுர மாற்றம் பெற்றோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

பிறந்த பதினைந்தாவது நாளே குப்புறப் படுத்து, நான்கு மாதத்தில் அப்பா என்று அழைக்கும் சிறுவனைக் கண்டால் யாருக்குத் தான் அதிர்ச்சியாய் இருக்காது ?

ஆறு மாதம் ஆகும்போதே வார்த்தைகள் உச்சரிக்கப் பழகிய் அவன், ஒன்றரை வயதான போது செய்தித் தாள் வாசித்தானாம் !

மேலும் வாசிக்க...
 

சனி கிரகத்தை சுற்றி புதிய ராட்சத வளையம்

சனி கிரகத்தை சுற்றி ஒரு ராட்சத வளையம் இருப்பதை அமெரிக்காவின் விண்வெளி "டெலஸ்கோப்" முதல் முறையாக கண்டுபிடித்துள்ளது. விண்வெளி ஆய்வில் இது ஒரு முக்கிய கண்டு பிடிப்பாக கருதப்படுகிறது.

மேலும் வாசிக்க...
 

ரோபோவுடன் செக்ஸ் !

உலகின் உண்மையான வில்லன் இனிமேல் தான் வரப்போகிறான். ரோபோ வடிவத்தில் ! வெறும் இயந்திரம் எனும் நிலையில் ஆரம்பிக்கப்பட்ட ரோபோக்களின் இன்றைய வளர்ச்சி பிரமிப்பூட்டுகிறது.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 12 - மொத்தம் 12 இல்