குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

உலக செய்திகள்

சிரியாவுடனான பேச்சுவார்த்தைகள் ஆக்கப்பூர்வம் - லெபனான் பிரதமர்

சிரியாவின் அதிபர் பஷர் அல் அஸ்ஸத்துடன் டமாஸ்கஸ் நகரில், தான் அண்மையில் நடத்திய இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகள் ஆக்கப்பூர்வமாகவும் ஒளிவுமறைவின்றியும் அமைந்திருந்தன என்று லெபனான் பிரதமர் சாத் அல் ஹரிரி தெரிவித்துள்ளார்.

தனது தந்தையும் முன்னாள் பிரதமருமான ரஃபிக் அல் ஹரிரியின் படுகொலைக்கு சிரியாதான் காரணம் என்று முன்பு சாத் அல் ஹரிரி குற்றம்சாட்டியிருந்தார்.

மேலும் வாசிக்க...
 

இரானில் அயதுல்லா மரணதுக்கு ஆயிரக்கணக்கானவர்கள் அஞ்சலி

இரான் அரசாங்கத்தின் விமர்சகரும் மூத்த மதபோதகருமான அயதுல்லா ஹொசைன் அலி மொண்டாசாரி அவர்களின் மரணத்துக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக ஆயிரக்கணக்கான மக்கள் இரானின் குவாம் நகரில் குவிந்துள்ளனர்.

திங்கட்கிழமையன்று அயதுல்லா அவர்களின் இறுதி ஊர்வலம் நடைபெறும் வீதிகள் எங்கும் கலவர தடுப்பு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக சீர்திருத்தவாதிகளின் இணையத்தளங்கள் தெரிவித்துள்ளன.

எதிர்கட்சியினருக்கு இந்த இறுதி ஊர்வலம் பேரணி நடத்துவதற்கான ஒரு வாய்ப்பாக அமையலாம் என செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் வாசிக்க...
 

ஏமனில் அல்கயீதாவினருக்கு எதிரான நடவடிக்கை

ஏமன் நாட்டுப் படையினர்ஏமன் நாட்டின் வடக்கிலும் , தெற்கிலும் மூன்று இடங்களில் உள்ள பயிற்சித்தளங்கள் மற்றும் மறைவிடங்களில் விமானப்படையின் ஆதரவுடன், தமது பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 34 அல்கயீதாவினர் கொல்லப்பட்டதாகவும், 17 பேர் கைது செய்யப்பட்டதாகவும் ஏமன் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

பள்ளிக்கூடங்கள் உட்பட உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ள இலக்குகள் மீது தற்கொலைத் தாக்குதல்களை நடத்த அந்தத் தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் வாசிக்க...
 

காலநிலை விவகாரத்தில் வறிய நாடுகளுக்கு அமெரிக்கா உதவி அறிவிப்பு

வறிய நாடுகள் காலநிலை மாற்றம் குறித்த விவகாரத்தை கையள்வதற்காக உதவும் வகையில் வருடாந்தம் 100 பில்லியன் டாலர்களை வழங்குவோம் என்று அமெரிக்கா கூறியுள்ளது.

அமெரிக்காவின் இந்த உறுதிமொழி, மிகவும் முக்கியத்துவம் மிக்கது என்று பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுண் விவரித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

இராக் உத்திகளைப் பயன்படுத்தினால் ஆப்கானிஸ்தானில் கிளர்ச்சியை தோற்கடிக்கலாம் - அமெரிக்க தளபதி

இராக்கில் பயன்படுத்தப்பட்ட உத்திகளைப் பயன்படுத்தினால் ஆஃப்கானிஸ்தானிலும் உள்நாட்டுக் கிளர்ச்சியைத் தோற்கடிக்க முடியும் என்று மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களுக்கான அமெரிக்கப் படைகளின் தளபதி ஜெனரல் டேவிட் பெட்ரேயஸ் கூறியுள்ளார்.

அமெரிக்கப் படைவீரர்கள் கிராமம் கிராமமாகச் சென்று அங்குள்ள சாதாரண மக்களிடம் இருந்து தாலிபான் அமைப்பின் கடும்போக்கு சக்திகளை தனியாகப் பிரிக்க வேண்டும் என்று ஜெனரல் கூறியுள்ளார்.

மேலும் வாசிக்க...
 

தலிபான்களுக்கு எதிராக புதிய நடவடிக்கை - பிரிட்டன் பிரதமர் கார்டன் பிரவுன்

ஆப்கானிஸ்தானுக்கு எவ்வித முன்னறிவுப்புமின்றி சென்றுள்ள பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன், தலிபான்களுக்கு எதிரான புதிய நடவடிக்கை இடம்பெறும் என்று தெரிவித்துள்ளார்.

கந்தஹாரில் விமானத்தளம் ஒன்றில் ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாய் அவர்களை சந்தித்த பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன், உள்ளூர் ஆட்களை பணியமர்த்துவதற்காக கர்சாய் அவர்கள் மேற்கொண்டு வரும் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்தார்.

மேலும் வாசிக்க...
 

சைப்ரஸ் முன்னாள் அதிபரின் சடலம் திருடுபோயுள்ளது

 சைப்ரஸ் நாட்டின் முன்னாள் அதிபர் டஸ்ஸோஸ் பப்பாடுபுலோஸின் சடலத்தை, சவக்குழியைத் தோண்டி திருடர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.

வியாழன் இரவு நடந்திருப்பதாய்த் தெரியுமிந்த திருட்டுச் சம்பவம் வெள்ளிக்கிழமை காலைதான் தெரியவந்ததுள்ளது.

அதிபர் இறந்த முதலாம் ஆண்டு நினைவு நாள் சனிக்கிழமை வரவுள்ள நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளது.

இது ஒரு மோசமான குற்றம் என்று கூறி கிரேக்க இன சைப்ரஸ் மக்களின் அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அதிபரின் சடலத்தை யார் திருடியிருப்பார்கள் எதற்காக இதனைச் செய்திருப்பார்கள் என்பதற்கான அறிகுறி எதுவும் இதுவரை தென்படவில்லை.

 

ஐரிஷ் பாதிரிமார் செய்த சிறார் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு போப்பாண்டவர் வருத்தம் தெரிவிப்பு

 ஐரிஷ் கத்தோலிக்க சமூகத்தில் சிறார்களை பாதிரிமார் பாலியல் துஸ்பிரயோகம் செய்தது குறித்தும் அதனை கத்தோலிக்க திருச்சபை மறைக்க முயன்றமை குறித்ததும் அந்த சமூகம் வெளியிடும் கோபத்தையும், வெட்கத்தையும் புனித பாப்பரசர் பெனடிக்ட் பகிர்ந்துகொள்வதாக வத்திக்கான கூறியுள்ளது.

கடந்த மாதம் ஐரிஸ் அரசாங்கம் வெளியிட்ட அறிக்கை ஒன்றினால் அவர் மன அமைதியிழந்து, சஞ்சலத்துடன் காணப்பட்டதாக, ஐரிஷ் ரோமன் கத்தோலிக்க தலைவர்களை பாப்பரசர் சந்தித்ததை அடுத்து வத்திக்கான் கூறியது.

மேலும் வாசிக்க...
 

கோபன்ஹேகனில் கார்பன் குறைப்பு வரைவு ஒப்பந்தம் பிரசுரம்

உலகின் செல்வந்த நாடுகள் தாம் வெளியிடுகின்ற வெப்ப வாயுக்களின் அளவில் மேலும் பெரிய குறைப்புகளைச் செய்ய வேண்டும் என்று கோரும் ஒப்பந்தம் ஒன்றின் வரைவு கோபன்ஹேகனில் நடந்துவரும் உலக பருவநிலை மாற்ற மாநாட்டில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் அடுத்த வாரம் உலக நாடுகளின் தலைவர்கள் சந்திக்கும்போது அவர்களிடையிலான பேச்சுவார்த்தைக்கு இந்த ஆவணம் அடித்தளமாக அமையும்.

மேலும் வாசிக்க...
 

இராக் எண்ணெய் வயல்கள் ஏலம்

இராக்கில் இதுவரை பெற்றோலியம் எடுக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படாத எண்ணெய் வயல்கள் பல்வேறுபட்ட நிறுவனங்களுக்கு ஏலத்தில் விடப்பட்டுள்ளன.

பெரிய விலைக்கு ஏலத்தில் விடப்பட்ட தெற்கு இராக்கின் மஜ்னூண் எண்ணெய் வயலை ஷெல் நிறுவனம் பெற்றிருக்கிறது.

அருகில் உள்ள ஹல்ஃபயா எண்ணெய் வயலின் உரிமைகள் சீன அரச பெற்றோலிய நிறுவனத்தின் தலைமையிலான கூட்டமைப்புக்கு கிடைத்திருக்கிறது.

மேலும் வாசிக்க...
 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.