இந்த உறைவிடப் பள்ளிகளில் உயரிய பாட போதனைகள் கற்பிக்கப்படுவதால் அயல் நாட்டு பெற்றோர் இந்த பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க விரும்புகிறார்கள். சுவிசு தனியார் உறைவிடப் பள்ளிகளில் 1 லட்சம் குழந்தைகள் சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்த தகவலை சுவிசு தனியார் பள்ளி கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது. இந்த பள்ளி மாணவர்கள் ரச்யா, யேர்மனி, பிரான்சு, அமெரிக்கா மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளை சேர்ந்தவர்களாக உள்ளனர்.
சுவிசு உறைவிடப் பள்ளிகளில் தங்கி படிக்கும் குழந்தைகளில் 80 சதவீதம் பேர் வெளிநாட்டு மாணவர்கள் ஆவார்கள். 20 சதவீதம் சுவிசு மாணவர்கள் மட்டுமே உறைவிடப் பள்ளிகளில் உள்ளனர்.
சுவிசு உறைவிடப் பள்ளிகளின் போதன முறை அயல் நாட்டு பெற்றோரை வெகுவாக கவர்ந்துள்ளது. சில உறைவிட பள்ளிகளில் 80 சதவீதத்திற்கும் அதிகமான அயல்நாட்டு மாணவர்கள் இருப்பது குறிப்படத்தக்கது.
உலக மயமாக்கல் நடவடிக்கை காரணமாக அயல் நாடுகளில் இருந்து எங்கள் நிறுவனங்களுக்கு 95 சதவீதம் வெளிநாட்டு மாணவர்கள் வருகிறார்கள் என சுவிஸ் லேர்னிங் சென்டர் இயக்குனர் கிறிசுடோபே கிளிவாஸ் கூறுகிறார்.
பிரித்தானிய உறைவிடப் பள்ளிகளில் 80 சதவீதம் பிரிட்டன் மாணவர்களும் 20 சதவீதம் அயல்நாட்டு மாணவர்களும் இருப்பார்கள். ஆனால் சுவிசில் அப்படி அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.