01 .08.2011 ----இலங்கைப்பிரச்சனையில் இந்தியா டில்லி தமிழர்கழுக்கு எதிராகவும் சிங்களவர்களுக்கு ஆதரவாக இந்தியா இருப்பதையும் தமிழகத்தையும் எதிர்க்கட்சி சூட்மாவையும் சமாளிக்கவே இந்த தந்திரம் காங்கிரசின்கபடம்...
இந்திய பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் இந்திய அரசின் அழைப்பின் பேரில் இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் உள்ளிட்ட சமல் ராயபக்ச உள்ளிட்ட சில இலங்கை எம்பிக்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தின் திமுகஇ அதிமுக கட்சிகள் இலங்கை விவாகரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பவிருந்த நிலையில் அவையின் சிறப்பு விருந்தினர்களாக இலங்கை சபாநாயகர் அமைந்திருந்ததோடு அவர்களை வரவேற்று பாராளுமன்ற சபாநாயகர் மீராகுமார் பேசினார்.
மீராகுமாரின் வரவேர்புரையிடையே இடைமறித்த அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள். மீராகுமாருக்கு எதிராகவும்இ இலங்கையில் இருந்து வந்திருந்த சமல்ராயபட்சவுக்கு எதிராகவும் கடும் கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் மீராகுமாரால் பேச முடியாமல் போனது.
உறுப்பினர்களை அமைதியாக கடும் தொனியில் கண்டித்த மீராகுமார் விருந்தினர்களை உபசரிக்கும் மரபு நமது இந்திய மரபு. அவர்கள் நமது விருந்தினர்கள். எனவே அமைதியாக அமருங்கள் என்று கடுந்தொனியில் எச்சரிக்கை செய்தார்.
பின்னர் அதிமுக உறுப்பினர்கள் அமைதியாக இருந்தனர். இந்த நிகழ்வின் போது திமுக உறுப்பினர்கள் அமைதியாக இருந்தனர்.