இலங்கைக்கு வழங்கப்படும் உதவிகளை ரத்துச்செய்யும் தீர்மானம் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை என்ற போதி லும், அதற்கான யோசனைத்திட்டம் குறித்த சட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அவர் கூறியுள்ளார். அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர் ஒருவரினால் இந்தத் தீர்மானம் முன்வைக் கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும், இந்தப்புதிய சட்டங்கள் அமுல் படுத்தப்படும் வரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படமாட்டாது என்று கூறப்படுகின்றது.
ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்டு வந்த “ஜி.எஸ்.பி.பிளஸ்” வரிச்சலுகை ரத்துச்செய்யப்பட்டுள்ள நிலையில் இலங்கைக்கு வழங்கப்பட்டு வருகின்ற உதவிக்கரம் ரத்துச்செய்யப்பட்டால் இலங்கையில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று இந்திய மத்திய அரசை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம் அண்மையில் வலியுறுத்தியது. இதனைத் தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் வரவேற்றிருந்தார்.