குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 28 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

பொருளாதாரத் தடை தீர்மானம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை – ரொபர்ட் ஓ பிளேக்!

01.08.2011.த.ஆ.2042--இலங்கைக்கான உதவிகளை ரத்துச் செய்வதற்கான தீர்மானம் இன்னும் நிறை வேற்றப்படவில்லை. இருந்தும் அது தொடர்பிலான சட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இவ்வாறு தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவி இராயாங்கச் செயலாளரும், இலங்கைக் கான அமெரிக்காவின் முன்னாள் தூதருமான ரொபர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வழங்கப்படும் உதவிகளை ரத்துச்செய்யும் தீர்மானம் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை என்ற போதி லும், அதற்கான யோசனைத்திட்டம் குறித்த சட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அவர் கூறியுள்ளார். அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர் ஒருவரினால் இந்தத் தீர்மானம் முன்வைக் கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும், இந்தப்புதிய சட்டங்கள் அமுல் படுத்தப்படும் வரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படமாட்டாது என்று கூறப்படுகின்றது.
ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்டு வந்த “ஜி.எஸ்.பி.பிளஸ்” வரிச்சலுகை ரத்துச்செய்யப்பட்டுள்ள நிலையில் இலங்கைக்கு வழங்கப்பட்டு வருகின்ற உதவிக்கரம் ரத்துச்செய்யப்பட்டால் இலங்கையில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று இந்திய மத்திய அரசை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம் அண்மையில் வலியுறுத்தியது. இதனைத் தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் வரவேற்றிருந்தார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.