31.07. 2011 இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் புகலிடம் கோரியவர்களே..140,000 புகலிடக் கோரிக்கையாளர்கள் இன்னமும் நாடு திரும்பவில்லை என ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் புகலிடம் கோரியவர்களே இவ்வாறு நாடு திரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளது. பிரான்ஸ், ஜெர்மனி, கனடா உள்ளிட்ட பல நாடுகளில் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு திரும்பும் புகலிடக் கோரிக்கையாளர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக காணி உரிமை தொடர்பான பிணக்குகளுக்கு இன்னமும் சரியான தீர்வுகள் கிடைக்கவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மீள்குடியேறும் புகலிடக் கோரிக்கையாளர்களை சொந்த இடங்களில் மீள் குடியேற்றுவதற்கு தேவையான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவனமும், இலங்கை அரசாங்கமும் தெரிவித்துள்ளது.