சனல் 4 தொலைக்காட்சி கடந்த 27ஆம் திகதி ஒளிபரப்பிய புதிய வீடியோவில் இராணுவத்தைச் சேர்ந்த இருவர் சரணடையும் விடுதலைப்புலிகளின் தலைவர்களைக் கொன்றுவிடுமாறு கோத்தபாய ராயபக்சவும், மேயர் யெனரல் சவேந்திர சில்வாவும் படைத்தரப்பினருக்கு உத்தரவிட்டிருந்ததாகத் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இக்கூற்றை முற்றாக நிராகரித்துள்ள கோத்தபாய ராசபச விடுதலைப்புலிகள் சரணடைவது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி நீல் பூனே தகவல் எதையும் தெரிவிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போது 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை மதிப்பீடு செய்துள்ளதாக அவரால் எவ்வாறு கூறமுடியும் என்றும் கோத்தபாய ராசபக்ச கேள்வி எழுப்பியுள்ளார். முல்லைத்தீவு அரசாங்க அதிபரின் பதிவுகளின் படி 3 இலட்சம் பேரே அங்கிருந்தனர் எனக் குறிப்பிட்ட அவர் வன்னிப்போரின் முடிபில் 2 இலட்சத்து 94 ஆயிரம் பேர் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இவர்களுள் ஏனையவர்கள் விடுதலைப்புலிகள். அவர்கள் போரில் கொல்லப்பட்டுவிட்டனர். மேலும் சிலர் கனடாவிற்கும், இந்தியாவிற்கும் தப்பிச்சென்றுவிட்டனர். அத்துடன் சூசை, தமிழ்ச்செல்வன் ஆகியோரின் குடும்பத்தினருக்கு அரசு பாதுகாப்பு வழங்கியுள்ளது. கடற்படையினரின் மரணங்களுக்குப் பொறுப்பான சூசையின் குடும்பத்தினரை எம்மால் கொலை செய்திருக்க முடியும்.
இதேவேளை சனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய வீடியோவில் தோன்றும் இருவரும் படைத்தரப்பைச் சேர்ந்தவர்கள் அல்ல என படைத்தரப்பின் குரல்தரவல்ல அதிகாரி மேயர் யனரல் உபய மெதவல தெரிவித்துள்ளார்.
சனல் 4 தொலைக்காட்சி முன்பு ஒளிபரப்பிய தமது வீடியோவை நியாயப்படுத்தவே இதனை வெளியிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் படைத்தரப்பைச் சேர்ந்தவர்கள் எவரும் வெளிநாட்டு ஊடகம் எதற்கும் செவ்வி வழங்கவில்லை எனவும் மேயர் யெனரல் உபய மெதவல கூறியுள்ளார்.
படைத்தரப்பினருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் நோக்குடன் புலம்பெயர்ந்தவர்கள் மேற்கொள்ளும் பொய்யான பரப்புரை இது என்றும் அவர் கூறினார்.
சனல் 4 மீது நடவடிக்கை எடுக்க பிரித்தானிய அரசைக் கோரும் கோத்தபாய! ; புதிய ஒளிநாடாவாவால் குழப்பம்
ஊடகத்துறையில் பொறுப்பற்றவகையில் செயற்படும் சனல் 4 தொலைக்காட்சி மீது நடவடிக்கை எடுக்குமாறு பிரித்தானிய அரசாங்கத்திடம் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராயபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போது சரணடைய வரும் விடுதலைப்புலிகளின் தலைவர்களைக் கொலை செய்துவிடுமாறு மேயர் யனரல் சவேந்திர சில்வாவிற்கு கோத்தபாய ராய பக்ச உத்தரவிட்டிருந்ததாக சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோ குறித்து கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சனல் 4 தொலைக்காட்சி கடந்த 27ஆம் திகதி ஒளிபரப்பிய புதிய வீடியோவில் இராணுவத்தைச் சேர்ந்த இருவர் சரணடையும் விடுதலைப்புலிகளின் தலைவர்களைக் கொன்றுவிடுமாறு கோத்தபாய ராயபக்சவும், மேயர் யெனரல் சவேந்திர சில்வாவும் படைத்தரப்பினருக்கு உத்தரவிட்டிருந்ததாகத் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இக்கூற்றை முற்றாக நிராகரித்துள்ள கோத்தபாய ராசபச விடுதலைப்புலிகள் சரணடைவது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி நீல் பூனே தகவல் எதையும் தெரிவிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போது 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை மதிப்பீடு செய்துள்ளதாக அவரால் எவ்வாறு கூறமுடியும் என்றும் கோத்தபாய ராசபக்ச கேள்வி எழுப்பியுள்ளார். முல்லைத்தீவு அரசாங்க அதிபரின் பதிவுகளின் படி 3 இலட்சம் பேரே அங்கிருந்தனர் எனக் குறிப்பிட்ட அவர் வன்னிப்போரின் முடிபில் 2 இலட்சத்து 94 ஆயிரம் பேர் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இவர்களுள் ஏனையவர்கள் விடுதலைப்புலிகள். அவர்கள் போரில் கொல்லப்பட்டுவிட்டனர். மேலும் சிலர் கனடாவிற்கும், இந்தியாவிற்கும் தப்பிச்சென்றுவிட்டனர். அத்துடன் சூசை, தமிழ்ச்செல்வன் ஆகியோரின் குடும்பத்தினருக்கு அரசு பாதுகாப்பு வழங்கியுள்ளது. கடற்படையினரின் மரணங்களுக்குப் பொறுப்பான சூசையின் குடும்பத்தினரை எம்மால் கொலை செய்திருக்க முடியும்.
இதேவேளை சனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய வீடியோவில் தோன்றும் இருவரும் படைத்தரப்பைச் சேர்ந்தவர்கள் அல்ல என படைத்தரப்பின் குரல்தரவல்ல அதிகாரி மேயர் யனரல் உபய மெதவல தெரிவித்துள்ளார்.
சனல் 4 தொலைக்காட்சி முன்பு ஒளிபரப்பிய தமது வீடியோவை நியாயப்படுத்தவே இதனை வெளியிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் படைத்தரப்பைச் சேர்ந்தவர்கள் எவரும் வெளிநாட்டு ஊடகம் எதற்கும் செவ்வி வழங்கவில்லை எனவும் மேயர் யெனரல் உபய மெதவல கூறியுள்ளார்.
படைத்தரப்பினருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் நோக்குடன் புலம்பெயர்ந்தவர்கள் மேற்கொள்ளும் பொய்யான பரப்புரை இது என்றும் அவர் கூறினார்.
இலங்கை முசுலிம்கள் வெளியேற்றப்பட வேண்டும் - பிரிவிக்
31 .07. 2011 இலங்கை வாழ் முசுலிம்கள் வெளியேற்றப்பட வேண்டுமென அண்மையில் நோர்வேயில் தாக்குதல்களை நடத்திய என்ட்ராசு பிரிங் பிரிவிக் தெரிவித்துள்ளார்.
இலங்கை, ஐரோப்பா, பிலிப்பைன்சு மற்றும் சீனா ஆகிய நாடுகளிலிருந்து முசுலிம்கள் வெளியேற்றப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
நோர்வே பிரதமர் அலுவலகம் மற்றும் இளைஞர் முகாம் ஒன்றின் மீது குறித்த நபர் மிலேச்சத்தனமான தாக்குதல்களை நடத்தியிருந்தார். இந்தத் தாக்குதல்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்ததுடன் சொத்துக்களுக்கும் பாரியளவில் சேதம் ஏற்பட்டிருந்தது.
பிரிவிக் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, ஐரோப்பாவை புறச் சக்திகளிடமிருந்து பாதுகாக்கும் நோக்கில் தாக்குதல்களை நடத்தியதாகத் தெரிவித்திருந்தார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட கொள்கைப் பிரகடனம் ஒன்றையும் பிரிவிக் வெளியிட்டுள்ளார்.
இந்தக் கொள்கைப் பிரகடனத்தில் நவீன போர்த் தந்திரோபாயங்கள் மற்றும் பயங்கரவாத அமைப்புக்கள் பற்றி சுட்டிக்காட்டியுள்ளார். ஐரோப்பிய சுதந்திரப் பிரகடனம் என அந்த அறிக்கைக்கு பெயர் சூட்டியுள்ள பிரிவிக், இலங்கையின் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பற்றியும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இலங்கை வாழ் முஸ்லிம்கள் நாடு கடத்தப்பட வேண்டும் எனவும் அதற்கு பூரண ஆதரவளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நான்காம் தலைமுறை யுத்தம் பற்றி குறிப்பிட்டுள்ள பிரிவிக், ஆயுதங்களை மட்டும் பயன்படுத்தி போர் மேற்கொள்ள முடியாது எனவும், சமூக கலாச்சார மற்றும் ஏனைய விழுமியங்கள் பற்றியும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மஹாத்மா காந்தியின் அகிம்சை வழிப் போராட்டம் தொடர்பிலும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார். அமெரிக்கா மற்றும் ரசுயா ஆகிய நாடுகளினால் ஐரோப்பா மீது செலுத்தி வரும் தாக்கங்களுக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.