30.07. 2011 -1990 ஆம் ஆண்டு இராணுவத்தில் இருந்து மாத்திரமல்ல நாட்டில் இருந்தும் அச்சத்தில் தப்பிச் சென்றவர்1990 ஆம் ஆண்டு அச்சத்தில் இராணுவத்தில் இருந்து மாத்திரமல்ல நாட்டில் இருந்து தப்பிச் சென்றவர் போரில் எப்படி வெற்றி பெற்றோம் என்ற புத்தகம் ஒன்றை எழுதி அண்ணனிடம் வழங்கியுள்ளார்.
இந்த அண்ணனுக்கும் தம்பிக்கும் வெட்கமில்லை. அந்த புத்தகத்தை படித்தால் இராணுவத்தில் உள்ள வீரர்கள் அதனை கிழித்து எறிந்து விடுவார்கள் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.
பான்-கீ-மூனின் நிபுணர்கள் குழுவின் அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் பாதுகாப்புச் செயலாளர் தயாரித்துள்ள அறிக்கை தொடர்பாக பதிலளிக்கும் போதே முன்னாள் இராணுவத் தளபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாது இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பு எதிராக பொன்சேக்கா தாக்கல் செய்துள்ள வழக்கு விசாரணையில் கலந்துக்கொள்வதற்காக நேற்று சிறைச்சாலை அதிகாரிகளினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இந்த வழக்கில், சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, சஞ்சீவ ஜயவர்தன, நாட்டினதும், இராணுவத்தினதும் சட்டத்திற்கு அமைய மேற்கொள்ளப்பட்ட இராணுவ நீதிமன்றத்தின் விசாரணைகளை ஜனாதிபதிக்கு அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் படி உறுதிப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.
குற்றம்சுமத்தப்பட்ட காலத்தில் தனக்கு இராணுவச் சட்டம் பொருந்தாது என சரத் பொன்சேக்கா கூறிய போதிலும், இராணுவச் சட்டம் மற்றும் கூட்டுப்படை தலைமை அதிகாரி சட்டத்திற்கு அமைய அவர் இராணுவச் சட்டத்திற்கு உட்பட்டவர் என்பது தெளிவாகியுள்ளதாகவும் சஞ்சீவ ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.