குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

அசத்துகின்றார் திகார்சிறையிலிருக்கும் ராசா திடுக்கிடுகின்றார்கள் பிரதமரும் சிதம்பரமும்.

26 .07. 2011  -சபாசு சிறையியிருக்கும் ராசா ஆடிபோலிருக்கும் ஆட்சியிலிருக்கும் காங்கிறசு..ராசா வாதத்தால் பிரதமர் - சிதம்பரத்திற்கு நெருக்கடி.பிரதமர் -உள்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும்-ஸ்பெக்டரம் அலைக்கற்றை ஊழலில் கைது செய்யப்பட்டு திமுகவின் முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா திஹார் சிறையில் உள்ளார். தன் மீது சிபிஐ தொடர்ந்துள்ள வழக்கில் ஊதியம் கொடுத்து வழக்கறிஞர்கள் எவரையும் நியமித்துக் கொள்ளாத ஆ.ராசா அந்த வழக்கில் தானே ஆஜராகி வாதிட்டார். நேற்றை வாதத்தில் அவர் இந்திய அரசுக்கும் சிபிஐக்கும் பல கேள்விகளை எழுப்பினார். இந்த கேள்விகள் சட்ட ரீதியாக மத்திய அரசுக்கும் சிபிஐக்கும் பல தர்மசங்கடங்களை உருவாக்கும் எனத் தெரிகிறது.
 
பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் உள்ள 2ஜி சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில், ஆ.ராசா சார்பில் வழக்கறிஞர் சுசீல் குமார் ஆஜராகி வாதிட்டார். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் நிதி அமைச்சரும் இப்போதைய உள்துறை அமைச்சருமான ப.சிதம்பரத்தின் ஒப்புதலுடன் நடைபெற்றதாக அப்போது அவர் கூறினார். அவர் மேலும் கூறியது:மத்திய தொலைத் தொடர்புத் துறையின் அமைச்சராக இருந்தபோது ஆ.ராசா மேற்கொண்ட முடிவுகள் எதிலும் தவறு இல்லை. முந்தைய அரசுகளால் மேற்கொள்ளப்பட்ட கொள்கைகளையே அவரும் பின்பற்றினார்.
 
 2ஜி அலைக்கற்றையை ஏலம் விடாமல் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்கிற அடிப்படையில் தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கும் நடைமுறை முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போதே இருந்து வந்தது. அதே நடைமுறையைத்தான் ஆ.ராசா பின்பற்றி வந்துள்ளார். இதில் அவர் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்கவில்லை; கொள்கையையும் மாற்றவில்லை. சட்ட விதிகளுக்கு உள்பட்டே டி.பி. ரியாலிட்டி, யூனிடெக் ஆகிய நிறுவனங்களுக்கு 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிறுவனங்களுக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது குறித்து பிரதமர் நன்றாக அறிவார். இதனை அவர் மறுக்க மாட்டார். தவறு இருந்திருக்கும் பட்சத்தில் பிரதமர் இந்த ஒதுக்கீட்டை அப்போதே தடுத்து நிறுத்தி இருக்கலாம்.
 
மத்திய அமைச்சரவை வழங்கிய அறிவுரையின் பேரில் நடந்த இந்த அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு அப்போதைய நிதி அமைச்சர் ப. சிதம்பரமும் ஒப்புதல் அளித்திருந்தார். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் தொலைத் தொடர்புத் துறையின் அமைச்சராக இருந்த அருண் செüரி 26 உரிமங்களும், பின்னர் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் இந்தத் துறையின் அமைச்சராக இருந்த திமுகவை சேர்ந்த தயாநிதி மாறன் 25 உரிமங்களும் வழங்கியிருக்கின்றனர்.
 
ஆ.ராசா தொலை தொடர்பு துறையின் அமைச்சராக பணியாற்றியபோது 122 உரிமங்கள் அளித்திருக்கிறார். எண்ணிக்கைதான் வித்தியாசம். ஆனால் கொள்கை ஒன்றுதான். அப்படியிருக்கும்போது, இந்த விவகாரத்தில் ஆ.ராசாவிடம் மட்டும் கேள்வி எழுப்பப்படுவது ஏன்? இதில் எங்கே குற்றம் நடந்திருக்கிறது? இதில் எங்கே சதி நடந்திருக்கிறது? ஆ.ராசா குற்றமற்றவர். முந்தைய அரசுகளின் கொள்கையைப் பின்பற்றியது தவறு என்றால் 1993 முதல் தொலைத் தொடர்பு துறை அமைச்சராக இருந்த அனைவரும் ஆ.ராசாவுடன் சிறையில் அடைக்கப்பட வேண்டும். அமைச்சராக ஆ.ராசா இருந்த போது அனைத்து தரப்பு மக்களும் பயன் அடையும் வகையில் திறமையாகப் பணி புரிந்தார்.
 
அந்தக் கால கட்டத்தில்தான் மொபைல் அழைப்புக் கட்டணம் வெகுவாகக் குறைக்கப்பட்டது. நாட்டில் ரிக்ஷா ஓட்டுபவர் உள்ளிட்ட அனைத்து ஏழை மக்களும் பயன் அடைந்துள்ளனர் என்று வாதிட்டார் சுசீல் குமார். சட்டரீதியாக செயல்பட்ட தன்னை பாராட்டியிருக்க வேண்டும். ஆனால் என்னை சிறைபட்டுத்தியிருக்கின்றீர்கள்.அப்படி என்றால் சட்டப்படி செயல்பட்ட எல்லோரும்தானே என்னுடன் சிறையில் அடைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.
 
 
பிரதமர் -உள்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும்.
.................................................................................................
 
 
இந்த வாதங்கள் வெளியான சில மணி நேரங்களின் பிஜேபி உடனடியான ஸ்பெக்டரம் ஊழலுக்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் எனக் கேட்டுக் கொண்டது. ஆனால் பிரதமர் பதவி விலக வேண்டும் என்ற பேச்சுக்கே இட்மைல்லை என்று காங்கிரஸ் கட்சி மறுத்துள்ள நிலையில், தன் மீதான் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கருத்துத் தெரிவித்த சிதம்பரம் நீதிமன்றத்தில் தெரிவித்த கருத்து தொடர்பாக எதுவும் சொல்ல முடியாது என்றூம் தான் சட்டத்திற்கு புறம்பான வகையில் எதையும் செய்யவில்லை என்றூம் கூறியுள்ளார். இன்றூம் சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெறும் விவாதத்தில் ஆ.ராசா தன் தரப்பு வாதங்களை முன்வைக்கிறார்.
 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.