அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், இலங்கையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் போது, அது பெரும்பான்மை சிங்கள மக்களால் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வாக அமைய வேண்டும். இலங்கை அரசுடனான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இறுதி மூன்று பேச்சுவார்த்தைகளிலும் குறிப்பிட்ட முன்னேற்றம் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
போர்க்குற்ற விசாரணை தொடர்பில் கருத்துத் தெரிவித்து உரையாற்றிய அவர்,
போர்க்குற்றம் இரண்டு பகுதியினருக்கும் எதிராக இருப்பதால் அதை விசாரணைக்குட்படுத்தி, எமக்கான தீர்வினைப் பெற்றுக்கொள்ளப் போகின்றோமா? என கேள்வி எழுப்பிய சுமந்திரனின் உரையின் தொனி, புலம்பெயர் மக்களின் எழுச்சியையும் அவர்களின் செயல்பாடுகளையும் கொச்சைப்படுத்தும் வகையில் அமைந்திருந்து.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் பதிவு செய்வதற்கு தமிழரசுக்கட்சி முட்டுக்கட்டையாக இருக்கின்றதே? எனக் கேள்வி எழுப்பிய போது நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய இரத்தினசிங்கம் என்பவர் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த விடயத்திற்கு பதில் வழங்க முடியாது என்று சுமந்திரன் நழுவியிருக்கின்றார்.
புலம்பெயர் தமிழ் மக்கள் தமது செயற்பாடுகளில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என மீண்டும் வலியுறுத்திய அவர், சிங்கள மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வு ஒன்றை நோக்கியே தாம் செல்லப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் மக்கள் எதுவும் அறியாதவர்கள், அவர்கள் அரசியல் ஞானம் அற்றவர்கள் என்ற தொனியில் அவர் உரையாற்றியமை புலம்பெயர் மக்கள் மத்தியில் மிகுந்த கவலையினைத் தோற்றுவித்துள்ளன.
புலம்பெயர் தமிழ் மக்களின் செயற்பாடுகளை பிரித்தானிய தமிழர் பேரவை, உலகத் தமிழர் பேரவை, நாடு கடந்த அரசு மற்றும் பல அமைப்புக்கள் வழிநடத்திச் செல்கின்றன.
புலம் பெயர் தமிழ் மக்கள் மற்றும் அமைப்புக்களின் செயற்பாடுகளே இன்று தமிழினப் படுகொலை போர்க்குற்றம் வரை சென்றுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்; இதை சுமந்திரன் அறிந்திருப்பாரா என்பது கேள்விக்குறியே என்றார் நிகழ்வில் கலந்து கொண்ட முதியவர் ஒருவர். இக் கூட்டத்தில் நூற்றிற்கும் குறைவானவர்களே கலந்து கொண்டனர்.