21 .07.2011 வடக்கில் துணை இராணுவக் குழுக்களின் செயற்பாடுகள் கட்டுப்படுத்தபபட வேண்டுமென அமெரிக்கா ராயாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கில் மாகாணசபைத் தேர்தல்களை நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது.
30 ஆண்டுகளாக புலிகளின் கட்டுப்பாட்டில் காணப்பட்ட பிரதேசத்தில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வடக்கில் மாகாணசபைத் தேர்தல்கள் நடத்துவதன் மூலம் ஜனநாயக ரீதியான அரசில் கட்டமைப்பொன்றை உருவாக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மக்களை மீள் குடியேற்றும் நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் பாராட்டத்தக்கது என அமெரிக்கா அறிவித்துள்ளது. இன்னமும் 10000 இடம்பெயர் மக்களே முகாம்களில் தங்கியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இது ஆரோக்கியமான ஓர் நிலைமை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.