'' 21 ஆம் நூற்றாண்டில் உலக வரலாறு எழுதப்படும் போது அதில் இந்தியாவின் பங்கு அளப்பரியதாக இருக்கும் இந்திய மத்திய அரசின் பங்கு மட்டுமல்ல மாநில அரசுகளின் பங்கும் அதில் அதிகம். ஐநா பாதுகாப்பு அவையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக அமெரிக்க அதிபர் ஓபாமா ஆதரவு தெரிவித்துள்ளார். உலகளாவிய அச்சுறுத்தலான அணு ஆயுதப் பரவல் தடுப்பில் இந்தியா தனது பங்களிப்பை உலகிற்கு வழங்க வேண்டும்.
ஈரானை அணு ஆயுத பலத்திலும் அணு ஆயுத பரவலிலும் கட்டுப்படுத்தும் அமெரிக்காவின் நடவடிக்கையில் இந்தியா தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும். தமிழக மக்கள் இந்தியாவிலேயே அதிக விழிப்புணர்வு உள்ளவர்களாகவும் கல்வி போன்றவைகளில் முன்னேறியவர்களாகவும் உள்ளனர். அரசியல் ரீதியாக மிகவும் விழிப்புண்ர்வு உள்ளவர்களாகவும் இருக்கின்றனர். இங்கே இலங்கை மக்கள் தொடர்பான உணர்வுகளும் உள்ளன. இலங்கையில் எல்லா மக்களும் சமத்துவமான ஒரு வாழ்வை வாழ்வதற்கும் போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அனைத்து உரிமைகள் கிடைக்கவும் உறுதியாக உள்ளோம்.