301. |
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக் காக்கின்என் காவாக்கா |
302. |
செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும் இல்அதனின் தீய பிற. |
303. |
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய பிறத்தல் அதனான் வரும். |
304. |
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் பகையும் உளவோ பிற. |
305. |
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லுஞ் சினம். |
306. |
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் ஏமப் புணையைச் சுடும். |
307. |
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு நிலத்தறைந்தான் கைபிழையா தற்று. |
308. |
இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும் புணரின் வெகுளாமை நன்று. |
309. |
உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின். |
310. |
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை. |