17.07.2011--போரின் பின்னரான அபிவிருத்திப் பணிகளுக்கு போதியளவு நிதி உதவிகள் கிடைக்கப் பெறுவதில்லை என ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான உதவிகளுக்கான ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
அபிவிருத்திப் பணிகளுக்கு தேவையான மொத்த நிதி உதவிகளில் 21 வீதமான நிதி உதவியே கிடைக்கப் பெற்றுள்ளதகாக் குறிப்பிட்டுள்ளது.
2011 ம் அண்டு மனிதாபிமான உதவிகளுக்காக மொத்தமாக 289 மில்லியன் அமெரமிக்க டொலர் தேவைப்படுவதாகவும், இதுவரையில் உதவி வழங்கும் நாடுகள் 62 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமே உதவியாக வழங்கியுள்ளன.
யுத்தத்தின் பின்னர் மீள் குடியேற்றப்பட்ட பெருந் தொகுதி மக்கள் தமது வாழ்வாதாரங்களை தொடர்வதில் இடர்களை எதிர்நோக்கி வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
குறிப்பாக மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவோர் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
உதாரணமாக கிளிநொச்சியில் 3168 மீனவ குடும்பங்கள் இருப்பதாகவும், 320 பைபர் கிளாஸ் படகுகளே காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மீனவர்கள் மட்டுமன்றி விவசாயிகள் உள்ளிட்ட ஏனைய தொழில்களில் ஈடுபடுவோரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.