குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

நாட்டின் மக்கள் தொகை 121 கோடி

சனி, 16.07.2011 --17:09 0    கிராமங்களில் மக்கள் தொகை குறைகிறது இந்தியாவின் மக்கள் தொகை 121 கோடி என்றும், இவர் களில் 70 சதவிகிதம் பேர் கிராமங்களில் வசிப்பதாகவும் மக்கள் தொகை கணக்கெ டுப்பின் மூலம் தெரிய வந்து உள்ளது. இந்தியாவில் இந்த ஆண்டில் (2011) மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றிய விவரங்களை மத்திய உள்துறை செய லாளர் ஆர்.கே.சிங் அறிக்கை ஒன்றில் வெளியிட்டு உள் ளார். அதில் கூறப் பட்டு இருப்பதாவது:-

இந்தியாவின் மக்கள் தொகை 121 கோடி ஆகும். இதில் 83 கோடியே 30 லட்சம் பேர் (70 சதவிகிதம்) கிரா மப்புறங்களில் வசிக்கி றார்கள். நகரங்களில் 37 கோடியே 70 லட்சம் பேர் (30 சதவிகிதம்) நக ரங்களில் வசிக்கிறார்கள்.

கடந்த 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஒப்பிடும் போது நகர்ப்புறங்களில் மக்கள் தொகை பெருக்கம் 27.81 சதவிகிதத்தில் இருந்து 31.16 சதவிகிதமாக அதி கரித்து உள்ளது. கிரா மப்புறங்களில் மக்கள் தொகை பெருக்கம் 72.19 சதவீதத்தில் இருந்து 68.84 சதவிகிதமாக குறைந்து இருக்கிறது.

ஒட்டு மொத்தத்தில் பார்க்கும் போது, நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து தற்போது மக்கள் தொகை வளர்ச்சி விகி தம் குறைந்து இருக் கிறது. நகர்ப்புறங்களை பொறுத்த மட்டில் மக் கள் தொகை வளர்ச்சி விகிதத்தில் குறிப்பிடத் தக்க மாற்றம் இல்லை என்ற போதிலும், கிரா மங்களில் வளர்ச்சி விகி தம் குறைந்து உள்ளது. என்றாலும் கடந்த 10 ஆண்டுகளில் கிராமப் புறங்களில் குழந்தைகள் பிறப்பு 9 கோடி அதி கரித்து இருக்கிறது.

கிராமப்புற மக்களை பொறுத்த மட்டில் உத்தரபிரதேசத்தில் மட்டும் கிராமங்களில் 15.5 கோடி பேர் வசிக் கிறார்கள். நாட்டில் உள்ள மொத்த கிராமப் புற மக்கள் தொகையில் 18.62 சதவிகிதம் பேர் உத் தரபிரதேசத்தில் உள்ள னர். நகர்ப்புற மக்கள் தொகையில் 13.48 சதவீ தம் பேர் மராட்டியத் தில் உள்ளனர். நகர்ப்புற மக்கள் தொகையில் மராட்டிய மாநில தலை நகரான மும்பை முதல் இடத்தில் உள்ளது.

நாட்டின் மக்கள் தொகை பெருக்கத்தில் மாநிலங்களை பொறுத் தமட்டில் மேகாலயா (27 சதவிகிதம்), பீகார் (24 சதவிகிதம்) ஆகியவை முன்னணியில் உள்ளன.

2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக் கெடுப்பின் போது நாட் டில் ஆயிரம் ஆண் களுக்கு 933 பெண்கள் என்ற விகிதம் இருந்தது. இப்போது ஆயிரம் ஆண்களுக்கு 940 பெண்கள் என்ற விகிதம் உள்ளது.

கிராமப்புறங்களை விட நகர்ப்புறங்களில் ஆண்-பெண் குழந்தை கள் விகிதம் குறைவாக உள்ளது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.