எரிமலைக் குழம்பு பொங்கி வரு வதைப்பார்த்த பெண் ஒருவர் அதிர்ச் சியில் இறந்தார். இது தவிர அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழவில்லை என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக் கின்றன.
வடக்கு சுலவேசி மாகாணத்தின் தெற்கு பகுதியில் உள்ளது லோகான் மலைப்பகுதி. சுமார் 5,741 அடி உயர முள்ள இந்த மலை சிகரத்தில் இருந்து கடந்த வியாழக்கிழமை இரவு சுமார் 10.46 மணிக்கு திடீரென எரிமலை வெடித்தது. தொடர்ந்து எரிமலைக்குழம்பு பொங்கி வழியத்தொடங்கியது. இதனால் அதிர்ச் சியடைந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு ஓடத் தொடங்கினர்.
இதில் அதிர்ச்சியடைந்த 56 வயது பெண் ஒருவர் மாரடைப்பால் இறந்த தாக நகர மேயராக பொறுப்பு வகிக்கும் ஜிம்மி எமான் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மீண்டும் வெள்ளிக்கிழ மை அதிகாலை இரு முறை எரிமலை வெடித்ததால் காவல்துறையினரும், பாதுகாப்பு படையினரும் சம்பவ இடத் துக்கு விரைந்தனர். மலையடி வாரப் பகுதியில் வசித்து வந்த பொதுமக்களை பத்திரமாக மீட்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர். சுமார் 6,000 பேர் பள்ளி களிலும், தற்காலிக முகாம்களிலும் பத்திரமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். அதேபோல் மலையடிவாரத்தின் 2 மைல் சுற்றளவுக்கு அப்பால் உள்ள சுமார் 27 ஆயிரம் பேரும் பாதுகாப்பு கருதி வேறு இடங் களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதுவரை இவ்வளவு பயங்கரமான எரிமலையை நான் பார்த்ததில்லை' என்று நெல்சன் உவாடா என்பவர் தெரிவித்தார். எரிமலைக் குழம்பு உருகி வருவது, பெரும் இரைச்சலாக கேட்டது. போர்க் களத்தில் இருப்பதை போன்ற உணர்வை ஏற்படுத்தியது என்றும், எரிமலைக் குழம்பு உருகி ஓடியதால் அருகே உள்ள காடுகளில் தீப்பற்றும் அபாயம் ஏற் பட்டுள்ளதாகவும் ஃபெர்ரி ரஸ்மவான் என்ற அதிகாரி செய்தி யாளர்களிடம் தெரிவித்தார்.