குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

சிவத்தம்பியெனும் தமிழ்விழி மூடியது தமிழ்ஒளி அணைந்தது.குமரிநாடு இணையத்தின் இறுதி அஞ்சலிகள்.10.07.2011

சிவத்தம்பியெனும் தமிழ்விழி மூடியது தமிழ்ஒளி அணைந்தது.
     தமிழ் முத்தமிழாய் இருந்தது இவர் மும்மொழியாய் திகழ்தார்.
எத்திசையும் சென்றுவந்தார் மொழிகளை கலைகளை  ஆய்வுகள்செய்தார்.
    அன்னியதேசத்து தமிழ்ப்பிள்ளைகள் கற்றிட நுால்கள் ஆகிட
ஆர்வம்கொண்டோர்க்கு ஆதரவாய் உறுதுணையாய் உயர்ந்திருந்தார்.
      இலக்கியத்தை இடித்துப்பிழிந்து தமிழ்மூலிகை ஆக்கினார்.
கலைகளை  உயர்த்திட உழைத்தார்    கலங்கரை  விளக்கானார்..
       ஒளிவடிவான இறைவனோடு  இன்றுஒளியிடையாகின்றார்.

பூநகரி..பொ.முருகவேள்.ஆசிரியர் சுவிசு.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.