குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 7 ம் திகதி செவ்வாய் கிழமை .

செம்பு குடங்களில் நீர் எதற்கு.....?மொறீசுயசு நாட்டில் தமிழர்கள் வாழ்வு!

செம்பு குடங்களில் நீர் எதற்கு.....?

அந்தக் காலங்களில் நம் சித்தர்கள் செம்பு குடங்களில் தான் தண்ணீரை பிடித்து வைப்பார்கள். ஆனால் இன்றோ, நாடே நவீன மயமாகிவிட்டதால், கேன் வாட்டர், மினரல் வாட்டர் என்று பல தண்ணீர்கள் முந்திக்கொண்டு வர செம்புக் குடங்கள் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டன. ஆனால் வீட்டுக்கு ஒரு செம்புத் தகடு இருந்தாலே போதும், அருமையான மினரல் வாட்டர் கிடைத்துவிடும். மாசம் நூற்றுக்கணக்கான ரூபாய் மிச்சமாகும். சித்தர்கள் தண்ணீர் செம்பு குடங்களில் பிடித்து வைப்பார்கள் ஏன் தெரியுமா?

செம்புப் பாத்திரத்தில் 24-மணி நேரம் குடிநீரைவைத்திருந்து பரிசோதித்துப் பார்த்ததில், மனிதர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் எதுவும் அந்த நீரில் இல்லை என்று அந்த நிறுவனம் அறிவித்தது. இந்தத் தகவல் தெரிஞ்சதிலிருந்து செம்புக் குடத்துல வெச்சிருந்து தான் தண்ணியைக் குடிக்கின்றார்கள். கிணத்துல கிடைக்கின்ற தண்ணி, செம்புக் குடத்துக்குப் போனதும் 'மினரல் வாட்டர்' மாதிரி அருமையாக மாறிவிடுகிறதாம். செம்பு குடம் இல்லனாலும் பரவாயில்லை. ஒரு கையளவு செப்பு தகட்டை குடத்துக்குள்ள போட்டு வெச்சா கூட உங்க வீட்டுத் தண்ணி தரமானதா மாறிடும்.

 

மூணு நாளைக்கு ஒரு தரம் செம்பு தகட்டை எடுத்துப் பார்த்தா பாசி புடிச்ச மாதிரி இருக்கும். அதெல்லாம் பாக்டீரியாக்கள்தான். தகட்டைச் சுத்தமா கழுவிவிட்டு திரும்பவும் குடத்துக்குள்ள போட்டு வைக்கலாம். அந்தக் காலத்துல பல வீடுகளில் செம்புக்குடம்தான். இன்றைக்கும் சில கிராமங்களில் செம்பு குடத்தில்தான் தண்ணிர் குடிக்கிறார்கள்.

 

தாமிரம் அல்லது செம்பு பாத்திரத்தில் நிரப்பப்பட்ட தண்ணீரை குடித்தால் நாம் ஆரோக்கியமாக இருக்கலாம் என்பது பழங்காலமாக இந்தியாவில் நிலவி வரும் நம்பிக்கையாகும். பானை அல்லது குடம் வடிவத்தில் உள்ள தாமிர பாத்திரத்தில் நம் தாத்தா பாட்டி தண்ணீர் பருகுவதை நாம் கண்டிருப்போம்.

 

தாமிர பாத்திரத்தில் நிரப்பப்பட்ட தண்ணீரால் கிடைக்கும் உடல் நல பயன்களை பெறுவதற்கு பலரும் தண்ணீரை தாமிர கோப்பையில் நிரப்பி பருகுகின்றனர். ஆனால் இந்த நம்பிக்கையில் அறிவியல் சார்ந்த உண்மை ஏதேனும் உள்ளதா? வாங்க பார்க்கலாம்!

 

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!! இந்திய பண்பாட்டின் படி, தாமிர பானையில் இருந்து தண்ணீர் குடிப்பது ஆயுர்வேதத்தின் அடிப்படையாகும். ஆயுர்வேதத்தின் பண்டைய அறிவியல் படி, உடம்பில் உள்ள மூன்று தோஷங்களான வாதம், பித்தம், கபம் போன்றவற்றை சரியான அளவில் சமநிலையுடன் வைத்திருக்க தாமிரம் உதவுகிறது. அதனால் தாமிர பானையில் இருந்து தண்ணீரை குடித்தால், உங்கள் உடலில் உள்ள இந்த தோஷங்கள் சமநிலையுடன் பராமரிக்கப்படும். இயற்கை தந்த வரப்பிரசாதமான இளநீரில் நிறைந்துள்ள நன்மைகள்!!! அறிவியலின் பார்வையில், தாமிரம் என்பது உடலுக்கு தேவையான தாமிரமாகும்.

 

இதுப்போக, தண்ணீர் மக்கி போகாமல் இருக்க தாமிரம் ஒரு எலெக்ட்ரோலைட்டாக செயல்படும். அதனால் தாமிர பாத்திரத்தில் வைத்துள்ள தண்ணீர், நாட்கணக்கில் நற்பதத்துடன் விளங்கும். தாமிர பாத்திரத்தில் வைத்துள்ள தண்ணீரை பருகுவதனால் கிடைக்கும் பல்வேறு உடல்நல பயன்கள் கீழ்வருமாறு:

 

1) பாக்டீரியாக்களை கொல்லும் தண்ணீரில் உள்ள நோய் கிருமிகளை ஒழிக்கும் குணத்தை கொண்டுள்ளது தாமிரம். முக்கியமாக வயிற்று போக்கினால் உண்டாகும் ஈ-கோலி போன்ற பாக்டீரியாக்களுக்கு எதிராக இது சிறப்பாக செயல்படும். அதனால் தாமிர பானையில் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் இயற்கையாகவே சுத்தமானவையாக இருக்கும்.

 

2) தைராய்டு செயல்பாட்டை ஒழுங்குப்படுத்தும் தாமிரம் என்பது அரியக் கனிமமாகும். தைராய்டு சுரப்பி சீராக செயல்பட இது அதிமுக்கியமானதாக கருதப்படுகிறது. பல நேரங்களில், தாமிர குறைபாடு இருக்கையில், தைராய்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும். தாமிர பானையில் உள்ள தண்ணீரை குடிப்பதால் உடல்நல பிரச்சனைகளை சமநிலையில் வைத்திடும்.

 

3) கீல்வாத வலியை குணப்படுத்தும் தாமிரத்தில் அழற்சி நீக்கும் குணங்கள் அளவுக்கு அதிகமாக அடங்கியுள்ளது. கீல்வாதத்தினால் மூட்டுக்களில் ஏற்படும் வலியை குணப்படுத்த இது பெரிதும் உதவுகிறது.

 

4) புண்களை வேகமாக குணப்படுத்தும் புதிய அணுக்களை உருவாக்கி அதனை வேகமாக வளரச் செய்ய தாமிரம் உதவும். இதனால் புண்கள் வேகமாக குணமாகும். இதிலுள்ள வைரஸ் நீக்கி மற்றும் பாக்டீரியா நீக்கி குணங்கள் தொற்றுக்களின் வளர்ச்சியை தடுக்கும்.

 

5) மூளை நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் மூளையில் உள்ள நரம்பணுக்களுக்கு மத்தியில் உள்ள இடைவெளிகளை பாதுகாக்க மயலின் உறைகள் அதனை மூடும். இந்த மயலின் உறைகளை உருவாக்க கொழுப்பு வகைப் பொருட்களை தொகுக்க தாமிரம் உதவுகிறது. இது போக வலிப்பு வராமலும் அது தடுக்கும்.

 

6) செரிமானத்தை மேம்படுத்தும் வயிற்றை மெதுவாக சுருக்கி விரிவாக்க ஊக்குவிக்கும் அறிய குணத்தை தாமிரம் கொண்டுள்ளது. இதனால் செரிமானம் சிறப்பாக நடைபெறும். அதனால் தான் தாமிரம் கலந்துள்ள தண்ணீரை பருகினால் ஆரோக்கியமான செரிமான அமைப்பை பெற்றிடலாம்.

 

7) இரத்த சோகையை எதிர்க்கும் நம் உடலில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியின் அதிகரிக்க தாமிரம் உதவுகிறது. இரத்த சோகையை எதிர்க்க இரும்பு மிக முக்கியமான கனிமமாகும். இதற்கு தாமிரமும் சிறிய அளவில் தேவைப்படும்.

 

8) கர்ப்ப காலத்தின் போது: கர்ப்ப காலத்தில் உங்களையும், உங்கள் குழந்தையும் பாதுகாக்க உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி விசேஷ சவாலை சந்திக்கும். அதனால் கர்ப்ப காலத்தில் தாமிர பானையில் உள்ள தண்ணீரை குடித்தால், தொற்றுக்கள் மற்றும் நோய்வாய் படாமல் பாதுகாப்போடு இருக்கலாம்.

 

9) புற்றுநோய்க்கு எதிராக பாதுகாக்கும் தாமிரத்தில் சிறப்பான ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள் அடங்கியுள்ளது. அதனால் தான் புற்றுநோய் அணுக்கள் வளர விடாமல் அது பாதுகாக்கிறது. மேலும் இயக்க உறுப்புகளால் உடலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்ய இது உதவும்.

 

10) வயதாகும் செயல்முறை குறையும் தாமிரத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் திட்டுகளை சிறப்பாக கையாளும். கூடுதல் அளவிலான தாமிரத்தால், உங்கள் சருமம் மற்றும் முடிக்கு இயற்கையான இரத்த ஓட்டம் கிடைக்கும்.

 

மொரீஷியஸ் நாட்டுத் தமிழர் வாழ்வியல் – மொரீஷியஸ் தமிழறிஞர் பேராசிரியர் உமாதேவி அழகிரி பேசுகிறார்

 

மொறீசுயசு நாட்டில் தமிழர்கள் வாழ்வு!

மொரீஷியஸ் நாட்டுத் தமிழர் வாழ்வியல் – மொரீஷியஸ் தமிழறிஞர் பேராசிரியர் உமாதேவி அழகிரி பேசுகிறார்

 

“மொரீஷியஸ் அரசு தமிழை மூன்றாம் இடத்துக்கு மாற்றி நோட்டுகளை அச்சிட்டார்கள். ஆனால் காலா, காலமாக நிலவிவரும் நடைமுறையை மாற்றக் கூடாது, இது வரலாற்றைக் களங்கப்படுத்தும் செயல் என்று கண்டனங்களைத் தெரிவித்ததோடு அங்குள்ள தமிழர்களோடு மொரீஷியஸ் பூர்வீகப் பிரஜைகளும் போராடினார்கள். இதன் விளைவாக, அச்சிட்ட அத்தனை பண நோட்டுகளையும் முடக்கிவிட்டு, வழமை போல பழைய முறையில் பண நோட்டுகளை தமிழை இரண்டாம் இடத்தில் வருமாறு செய்து அச்சிட்டு வெளியிட்டிருக்கிறார்கள்” -பேராசிரியர் உமாதேவி அழகிரி

 

மொரீசியஸ் நாட்டிலிருந்து  சிட்னி முருகன் சைவ நெறி மாநாட்டிற்கு வந்திருந்ததிருமதி உமா தேவி அழகிரி அவர்களுடன் உரையாடும் வாய்ப்புக் கிட்டியது.மொரீசியஸ் நாட்டில் தமிழர் வாழ்வு , இந்து மதத்தின் பரம்பல், என பல் வேறு விடயங்களை பகிர்ந்து கொண்டார் பேரா. உமாதேவி. குறிப்பாக இன்றைய தலைமுறைத் தமிழராக அங்கு பிறந்து வாழும் அவர் தன்னுடைய பேட்டி முழுதும் சுத்தமான தமிழில் பேசியது பெரும் வியப்பை அளித்தது.

 

பேட்டியின் முழுமையான ஒலிவடிவத்தைக் கேட்க

00:0041:01

 

Download பண்ணிக் கேட்க

பேரா. உமாதேவி அழகிரியின் பேட்டியிலிருந்து சில பகுதிகள் எழுத்தில்

 

 

 

கானா பிரபா- குங்குமப் பொட்டோடும், காஞ்சிபுரம் பட்டுச் சேலையோடும் உங்களை பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது……

உமா – ரொம்ப மகிழ்ச்சி நான் முதன் முறையாக ஆஸ்திரேலியாவுக்கு வந்திருக்கிறேன்  இது ஒரு மகிழ்ச்சியான நிகழ்வு.நான் மொரீசியசில் பிறந்திருந்தாலும் கூட  ,  சென்னைதான் எனக்குப் பிடிக்கும்.  அதனால் அடிக்கடிநான் சென்று வருவேன். மொரீசியஸ் தீவில் சுமார் 70,000 தமிழர்கள் இருக்கிறார்கள். மொத்த சனத்தொகையில் 8 விழுக்காட்டினர் தமிழர்கள்.  இந்தியப்பெருங்கடலின் சின்ன தீவு தான் மொரீசியஸ். எரிமலையில் இருந்து உருவான இந்த தீவு. இயற்கை வளம் கொண்டதாக இருக்கிறது.  பல்லின மக்களும்  இங்குவாழ்ந்தாலும்  சுமார்   275 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சியின் போது தமிழகத்தின் திருநெல்வேலி, தஞ்சாவூர், சித்தூர் போன்ற பகுதிகளில் இருந்து மூன்று கட்டங்களாக இங்கு தமிழர்கள் குடியேறினார்கள்.

 

கானா பிரபா –  உங்கள் குடும்பத்தினர் எந்த ஊரில் இருந்து வந்தார்கள்?

 

உமா – எனது கொள்ளுப்பாட்டி சித்தூரில் இருந்து வந்தார்கள். பாட்டியை புகைப்படத்தில் நான் பார்த்திருக்கிறேன். அவர் நல்ல உழைப்பாளி மட்டுமல்லதமிழ் பண்பாட்டை பேணியவர்கள்.

 

கானா பிரபா –  நீங்கள் மூன்றாம் தலைமுறை ஆனால் தூய தமிழில் அழகாகஉரையாடுகின்றீர்கள். இங்கே புகலிடச் சூழலில் இரண்டாம் தலைமுறையே தமிழ் கலாசாரத்தை பேண சிரமப்படுகிறோம். உங்கள் கணவரின் குடும்பம் பற்றி?

 

உமா –  கணவரின் குடும்பம் மதுரையிலிருந்து வந்தவர்கள். அக்காலத்தில்சிப்பாய்களாக வந்து பின்னர் இங்கு வணிகத்தில் ஈடுபட்டார்கள்.  அவர்கள்நான்காம் தலைமுறையாக இருக்கிறார்கள். அவர்கள் பேசும் தமிழ் வேறு விதமாக இருந்தது.   நமது முன்னோர்கள் மூன்று கட்டங்களாக இங்குவந்தார்கள். வெவ்வேறு நிலப்பகுதிகளில் இருந்து வந்ததால் தமிழை பலவிதமாக பேசுவார்கள். நான் இது பற்றி ஆய்வு செய்து நிறைய தாள்கள்தயாரித்திருக்கிறேன் சாதாரண தமிழ் பெயர்கள் எப்படி பிரெஞ்சு பெயராக மாறியது.மொழி எப்படி மாறுகிறது என்பது பற்றி எல்லாம் விரிவாக இந்த ஆய்வுகள்  நீண்டுகொண்டிருக்கிறது.

கானா பிரபா –  சுத்தமான தமிழில் பேசுறீங்க, மொரிசீயசில் தமிழ் கல்விஎப்படி உள்ளது?

 

உமா –  பாட்டியும், அம்மாவும்,  கொச்சை தமிழில் பேசுவார்கள்.  நம் வீட்டில் தமிழ் பேசவேண்டும் என்பது என் பாட்டியின் கண்டிப்பான கட்டுப்பாடுகளில் ஒன்று. தமிழை என் வீட்டில் இருந்தே நான் துவங்கினேன். மொரீசியஸ் நாட்டைப் பொருத்தவரை கிர்யோல் மொழி தாய் மொழியாக இருந்தாலும் கூட தமிழையும் மொரீசியஸ் அரசு வளர்க்கிறது . அங்குள்ள பள்ளிகளில் தமிழை கற்பிக்கிறார்கள்.  மேசை என்ற ஒரு சொல்லை எடுத்துக் கொண்டாலும் கூடஅதை பல விதமாக சொல்லிக்கொடுக்கிறார்கள்.  ‘’வரிசை வரிசையாக மேசையாம்”  என்ற பாடலை கற்பித்து மேசை, தோசை, காசை என்ற அழகான ஒலிச் சொற்களோடு  கற்றுக் கொடுக்கிறார்கள். தொடக்க நிலையில் வாரத்தில் 50மணி  நேரம் வரை  தமிழ் படிக்கலாம்.  பின்னர் நாட்டளவில் தேர்வு வைப்பார்கள்.என்று பல நிலைகளில் இயங்கி வருகிறோம்.

கானா பிரபா –  பாடசாலையைத் தாண்டி  தமிழர்கள் தங்களுக்குள் தமிழில்பேசிக் கொள்கிறார்களா?

 

உமா – அரசின் ஆதரவில் பள்ளிகளில் தமிழ் உள்ளது. மாலை பள்ளிகளும் அங்கு உள்ளது.ஆனால் தமிழர்கள் தங்களுக்குள் தமிழில் பேசுகிறார்களா என்றால் வருத்தம்தான்.  கிரியோல் மொழி அங்குள்ள தாய்மொழி என்பதால் அதைபேசுகிறார்கள். தமிழ் பேசுவதை பரவலாக்க 2008 -ம் ஆண்டில் ‘தமிழ் பேசுவோர் ஒன்றியம்” துவங்கப்பட்டது. தமிழ் பேசுவதை ஊக்கு விக்க துவங்கப்பட்ட இந்த நிறுவனத்தை அணுகினால் தமிழ் பேச அவர்கள் ஊக்கம் கொடுப்பார்கள்.

கானா பிரபா –  மொரீசியஸ் நாட்டு பண நோட்டில் ஒரு தமிழர்  முகம்உள்ளது அது யார்?

 

உமா – இது ஒரு வரலாற்றுக் குறிப்பு. மொரீசியஸ் வளர்ச்சிக்கு தமிழர்கள் அளித்த கொடையை அவர்கள் மறுக்கவில்லை.அரங்கநாதன் சீனிவாசன் என்கிற மூத்த தமிழ் தலைவரின் படம் அது அவர் தமிழர்களின் வாழ்வியல் மேம்பாட்டிற்காக உழைத்தவர்.

 

மொரீஷியஸ் நாட்டுப் பணத்தில் தமிழ் இரண்டாம் மொழியாக இருந்து வருகின்றது. ஆனால் சமீபகாலத்தில் தமிழர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் மொரீஷியஸ் அரசு தமிழை மூன்றாம் இடத்துக்கு மாற்றி நோட்டுகளை அச்சிட்டார்கள். ஆனால் காலா, காலமாக நிலவிவரும் நடைமுறையை மாற்றக் கூடாது, இது வரலாற்றைக் களங்கப்படுத்தும் செயல் என்று கண்டனங்களைத் தெரிவித்ததோடு அங்குள்ள தமிழர்களோடு மொரீஷியஸ் பூர்வீகப் பிரஜைகளும் போராடினார்கள். இதன் விளைவாக, அச்சிட்ட அத்தனை பண நோட்டுகளையும் முடக்கிவிட்டு, வழமை போல பழைய முறையில் பண நோட்டுகளை தமிழை இரண்டாம் இடத்தில் வருமாறு செய்து அச்சிட்டு வெளியிட்டிருக்கிறார்கள்.

 

கானா பிரபா –   மொரீஷியஸ் நாட்டில் நிலவும் தமிழர்களின் பண்பாட்டுநிகழ்வுகள் என்ன?

 

உமா –  தைபூச  காவடி, மகாசிவராத்திரி, தீபாவளி, போன்ற பண்டிகைகள் அங்கு கொண்டாடப்படுகின்றன.  அதுவும் தை பூச காவடி என்பது மிகச்சிறப்பானபண்டிகையாக கொண்டாடப்படுகிறது.அந்நாளில் அங்கு பொது விடுமுறைஎன்பதால்  பல்லின மக்களும் தை பூச காவடி எடுப்பார்கள். கிறிஸ்தவர்கள் கூட காவடி தூக்குவார்கள்.

 

கானா பிரபா –  உங்கள் பணிகளில் நீங்கள் பெருமைப்படும் விஷயம் என்ன?

 

உமா – மொரீஷியஸ் தமிழச்சி என்ற  வகையில் இந்த தலைமுறையினருக்குதமிழ் கற்றுக் கொடுக்க விரும்புவதையே நான் பெருமையாக நினைக்கிறேன். அங்குள்ள பள்ளிகளில் தமிழ் படிக்கும் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை உருவாக்குகிறேன். இன்னொரு பக்கம் மொரிசியஸ் தமிழர்களின் வரலாற்றை,மொழியை,பண்பாட்டு நகர்வை ஆய்வு செய்து ஆவணப்படுத்துகிறேன் இதுதான் நான் பெருமைப்படும் விஷயம்.

 

மேற்கண்ட பேட்டியை ஒலிவடிவில் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காகவும், எழுத்துப் பதிப்பை தமிழ் அவுஸ்திரேலியன் சஞ்சிகைக்காகவும் பகிர்ந்து கொண்டேன்.