மாடு கட்டும் கயிற்றினால் அச்சிறுமியை நயமுதீன் என்ற மாட்டு வியாபாரி கட்டி இழுத்து சென்றுள்ளார்.
சிறுமி அழுது சென்றதை அவதானித்த அயலவர் வவுணதீவில் இயங்கும் நவ கிராமிய சிறுவர் அமைப்பிற்கும் சிறுவர் நன்னடத்தை உத்தியோகஸ்தருக்கும் கிராம சேவை அலுவலருக்கும் வழங்கிய தகவலை அடுத்து பட்டிப்பளை காவல்துறையினர் சிறுமியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
பட்டிப்பளை காவல்துறையினர் நவ கிராமிய சிறுவர் அமைப்பு தலைவர் மா.பஞ்சலிங்கம்,சிறுவர் நன்னடத்தை உத்தியோகஸ்தர் எம்.வரதராஜன், கிராம சேவை உத்தியோகஸ்தர் கே.கிருஸ்ணப்பிள்ளை ஆகியோர் காங்கேயநோடைக்கு நேற்று சென்று காங்கயநோடையில் நயுமுதீன் வீட்டில் இருந்து சிறுமியை மீட்டுள்ளனர்.
அத்துடன் விலைபேசி வாங்கிச் சென்ற நயுமுதீனையும் கைது செய்ததுடன் விற்கப்பட்ட சிறுமியின் தந்தையையும் பட்டிப்பளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இன்று சிறுமியை வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் பாரப்படுத்துவதுடன் விற்ற தந்தையையும் கொள்வனவு செய்த நயுமுதினையும் இன்று பட்டிப்பளை காவல்துறையினர் நீதிமன்றில் நிறுத்தியுள்ளனர்.
சிறுமியை விற்றவருக்கு மூன்று திருமணம் என்றும் ஏற்கனவே இரண்டையும் கைவிட்ட நிலையில் மூன்றாவது திருமணத்தில் பிறந்த மூன்று பெண்பிள்ளைகளில் இரண்டாவது பிள்ளையே தற்போது அவர் முஸ்லீம் ஒருவருக்கு விற்றுள்ளார்.
இந்த மாட்டு வியாபாரியான நயமுதீன் என்ற இந்த முஸ்லீம் 11வயது சிறுமியை வீட்டுக்கு கொண்டு சென்று பாலியல் பலாத்காரம் புரிந்துள்ளதாகவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
ஏற்கனவே 2006ஆம் ஆண்டு மூன்றாவது பிள்ளை ஒன்றரை வயதாக இருந்த போது இவர் விற்ற விடயமும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த பிள்ளையின் நிலமை என்ன என்பது குறித்தும் இப் பிள்ளையினை மீட்கும் நடவடிக்கையிலும் தற்போது பட்டிப்பளை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.