19.01..2015-05.01.2046-பிரித்தானியா ஏவிய விண்கலம் ஒன்று சுமார் 11 ஆண்டுகளுக்கு பிறகு செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2003ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்துக்கு பிகில்-2(Beagle-2) என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு பிரித்தானியா அனுப்பியது.
இந்த விண்கலம் கடந்த 2003ம் ஆண்டு டிசம்பர் 26ம் திகதி திடீரென மாயமானதால் தகவல் கட்டுப்பாட்டு அறைக்கும், பிகில்–2 விண்கலத்துக்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
எனவே அந்த விண்கலம் என்ன ஆனது என்பது மர்ம மாக வே இருந்துள்ளது. எனினும் அந்த விண்கலத்தை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது.
தற்போது அந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கி இருப்பது, நாசாவின் செவ்வாய் கிரக உளவு பார்க்கும் விண்கலம் கண்டுபிடித்து புகைப்படம் எடுத்ததன் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த தகவலை பிரித்தானியா விண்வெளி நிறுவன தலைவர் டேவிட் பார்கர்(David Barker) கூறியுள்ளார். மேலும் அந்த விண்கலத்துடன் தொடர்பு கொள்ளவோ, அதில் இருந்து தகவல்களையோ பெற முடியாது என விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.