குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

11 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான விண்கலம் கண்டுபிடிப்பு

19.01..2015-05.01.2046-பிரித்தானியா ஏவிய விண்கலம் ஒன்று சுமார் 11 ஆண்டுகளுக்கு பிறகு செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

கடந்த 2003ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்துக்கு பிகில்-2(Beagle-2) என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு பிரித்தானியா அனுப்பியது.

இந்த விண்கலம் கடந்த 2003ம் ஆண்டு டிசம்பர் 26ம் திகதி திடீரென மாயமானதால் தகவல் கட்டுப்பாட்டு அறைக்கும், பிகில்–2 விண்கலத்துக்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

எனவே அந்த விண்கலம் என்ன ஆனது என்பது மர்ம மாக வே இருந்துள்ளது. எனினும் அந்த விண்கலத்தை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது.

தற்போது அந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கி இருப்பது, நாசாவின் செவ்வாய் கிரக உளவு பார்க்கும் விண்கலம் கண்டுபிடித்து புகைப்படம் எடுத்ததன் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த தகவலை பிரித்தானியா விண்வெளி நிறுவன தலைவர் டேவிட் பார்கர்(David Barker) கூறியுள்ளார். மேலும் அந்த விண்கலத்துடன் தொடர்பு கொள்ளவோ, அதில் இருந்து தகவல்களையோ பெற முடியாது என விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.