விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் சரணடையும் விடயம் மே 17ம் திகதி நண்பகலே அன்றைய காலகட்டத்தில் சனாதிபதியின் சிரேச்ட ஆலோசகராக இருந்த பசில் ராயபட்சவுக்கு கிடைத்திருந்தது.
ஆயினும் களமுனையில் கடுமையான யுத்தம் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த காரணத்தால், அத்தகவல் உரிய நேரத்தில் களமுனையின் கட்டளை அதிகாரிகளைச் சென்றடையவில்லை. அதன் காரணமாகவே மோதலின் போது விடுதலைப் புலிகளின் முக்கியசுதர்கள் கொல்லப்பட்டனர்.
அத்துடன் வன்னி போர் காலகட்டத்தில் மருந்துப் பொருட்களையும், அத்தியாவசிய பொருட்களையும் விநியோகிக்கும் பொறுப்பு பசில் ராயபட்சவிடமே இருந்தது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரசுதாப அறிக்கை மூலம் இதுவரை காலமும் போர்க்குற்றங்கள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராயபட்சவும், சனாதிபதி மகிந்த ராசபட்சவும் மட்டுமே குற்றம் சாட்டப்பட்டு வந்த நிலைமாறி தற்போது அமைச்சர் பசில் ராசபட்சசவின் பெயரும் அதில் உள்ளடக்கப்படக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.