குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

சூரியக் குளியல் மூலம் மார்புப் புற்றுநோயைத் தடுக்கலாம்! தாம்பத்தியமே சிறந்த உடற்பயிற்சி

தினசரி சராசரியாக மூன்று மணிநேரம் சூரிய வெய்யிலை உடலில் பட விடுவதன் மூலம் மார்புப் புற்றுநோய் ஏற்படும் ஆபத்தை 50 வீதத்தால் குறைத்துக் கொள்ளமுடியும் என்று புதிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. சூரிய வெய்யில் சருமத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றிய தொடர் ஆய்வுகளின் ஒரு அங்கமாகவே இந்த முடிவும் வெளியிடப்பட்டுள்ளது. சூரிய ஒளி தொடர்ச்சியாக உடலில் படுவதன் மூலம் அது உடலுக்குள் புற்று நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகமாக்குகின்றது.

இதற்குக் காரணம் சூரிய ஒளி மூலம் உடலுக்குள் விட்டமின் டி உள்வாங்கப்படுவதாகும். மார்புப் பகுதியில் உள்ள உடல் கலங்கள் சூரிய ஒளி மூலமான விட்டமின் டி யை உள்வாங்கி அவற்றை புற்றுநோய் எதிர்ப்பு ஹேரர்மோன்களாக மாற்றும் ஆற்றல் கொண்டவை என்பதுதான் புதிய கண்டுபிடிப்பாகும்.

கனடாவின் ஆய்வாளர்கள் தான் இந்த முடிவுக்கு வந்துள்ளனர். இதற்கென அவர்கள் 3101 மார்பகப் புற்றுநோய் நோயாளிகளையும், நல்ல ஆரோக்கியமான 3471 பேரையும் பயன்படுத்தியுள்ளனர்.

இவர்கள் தமது பருவ வயதில், 20வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட காலத்தில், 40 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட காலத்தில், பிறகு 60 முதல் 74 வயது வரையான காலத்தில் என வாழ்க்கையின் நான்கு கட்டங்களில் ஏப்பிரலுக்கும், அக்டோபருக்கும் இடைப்பட்ட காலத்தில் எவ்வளவு நேரம் வெய்யிலில் கழித்துள்ளார்கள் என்று ஆராயப்பட்ட பின்னரே ஆய்வாளர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.

இதில் தமது பருவ வயது காலத்தில் வாரத்தில் குறைந்த பட்சம் 21 மணிநேரம் தமது உடலில் சூரிய ஒளியை பட விட்ட பெண்களுக்கு,ஏனைய பெண்களிலும் பார்க்க மார்புப் புற்றுநோய் ஏற்படுவது 29 வீதம் குறைவாகவே காணப்பட்டது.

 

இதேபோல் உடலில் அதிகம் வெய்யில் பட வைத்த 40 முதல் 50 வயதானவர்களுக்கு இந்தப் பாதிப்பு ஏற்படுவது 26 வீதம் குறைவாகக் காணப்பட்டது, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்தப் பாதிப்பு 50 வீதம் குறைவாகக் காணப்பட்டது.

மனிதனின் மூளை அளவு குறைந்து விட்டது: நிபுணர்கள் தகவல்


இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர் டாக்டர் மார்தா லாகர் தலைமையிலான குழுவினர் மனிதனின் பரிணாம வளர்ச்சி குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

அவர்கள் ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய கண்டங்களில் வாழும் மனிதர்களின் மண்டை ஓடுகள் மூலம் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

சமீபத்தில் இஸ்ரேலில் உள்ள குகைகளில் இருந்து மனித மண்டை ஓடுகள் கிடைத்தன. இது கடந்த 1 லட்சம் முதல் 1 லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த குகை மனிதர்களுடையது என தெரிய வந்தது.

அவர்கள் நடத்திய ஆய்வின் மூலம் இவர்கள் மிகவும் உயரமாகவும், கட்டுமஸ்தான உடலமைப் புடனும் இருந்தது தெரிய வந்துள்ளது.

அதே போன்று அவர்களின் மூளை அளவு பெரிதாக இருந்தது. அவர்களின் உடல் அமைப்பை தற்போது வாழும் மனிதர்களுடன் ஒப்பிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

கடந்த 10 ஆயிரம் ஆண்டுக்குள் ஆதிகால மனிதனை விட தற்போதைய மனிதனின் உயரமும், உடல் எடையும் குறைந்துள்ளது.

அதே நேரத்தில் மூளையின் அளவும் 10 சதவீதம் குறைந்து சுருங்கி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அதற்கு தற்போது உணவு கட்டுப்பாடு மற்றும் சுகாதாரமற்ற சூழ்நிலை, இதை தொடர்ந்து ஏற்படும் நோய்களும் காரணம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

படுக்கையறையே உடற்பயிற்சிக் கூடம்-தாம்பத்தியமே சிறந்த உடற்பயிற்சி!


வியர்க்க விறுவிறுக்க நடக்க வேண்டாம். உடலை இளைக்க ஜிம்மிற்கும் போக வேண்டாம். உங்களுடைய படுக்கையறையே சிறந்த உடற்பயிற்சி கூடம்தான் என்ற உண்மை கண்டறியப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையுடன் நிறைவான தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபட்டாலே உடல் இளைக்கும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. செக்ஸர்சைஸ் இருக்க எக்ஸ்சர்சைஸ் எதற்கு? என்று கேட்கின்றனர் மருத்துவர்கள்

நிம்மதியான உறக்கம்

நிறைவான தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். இதயத்துடிப்பு சீராகும். கெட்ட கொழுப்புகளை எரித்து நல்ல கொழுப்புகளை தக்க வைக்கும் என்ற வியக்கத்தக்க மருத்துவ உண்மைகள் தெரியவந்துள்ளது.

உடல் உறவின் மூலம் எடை கட்டுப்பாட்டிற்குள் வருவதோடு நிம்மதியான உறக்கமும் ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள்

பெண்களுக்கு அதிக உற்சாகம்

தாம்பத்ய உறவின் மூலம் அதிகம் பலனடைவது பெண்கள்தான். அவர்களுக்கு ஈஸ்ட்ரோஜன் அதிகம் சுரக்கிறது. முகத்தின் பளபளப்பு அதிகரிக்கும்.

மேலும் தலைமுடியின் வளர்ச்சி அதிகரிப்பதோடு கூந்தல் பட்டுப் போல மிருதுவாகும் என்பது தெரியவந்துள்ளது. பெண்களின் கவர்ச்சி அதிகரிப்பதால் அவர்கள் தினமும் அந்த உறவினை விரும்புகின்றனர்.

மாயமாகும் கலோரிகள்

30 நிமிட உறவின் மூலம் 15 லிருந்து 350 கலோரிகள் வரை எரிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தினமும் அரைமணி நேரம் வேகமாக நடப்பதற்கும் வேகமாக ஓடுவதற்கும் சமமானதாகும்.

வாரத்திற்கு 5 முறை உறவு வைத்துக் கொள்ளும் பட்சத்தில் 1650 கலோரிகள் எரிக்கப்படுகின்றனவாம். இதன் மூலம் இருவரின் உடல் எடையும் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

கற்பனைத் திறன்

தினமும் ஒரே உணவை சாப்பிட்டாலும் போரடிக்கும் அல்லவா! ஒரே மாதிரியான உறவும் போரடிக்கும். கற்பனைத்திறனை புகுத்துங்கள்.அப்புறம் பாருங்கள், உங்களின் உடல் நீங்கள் சொன்னபடி கேட்கும். படுக்கையறையே உடற்பயிற்சிக்கூடாராமான பிறகு யாராவது பணம் செலவு செய்து ஜிம்மிற்கு போவார்களா என்ன?. ஆரோக்யமான உறவு உடலையும் உள்ளத்தையும் ஆரோக்யமாக வைத்திருக்கும்.