குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

தமிழ்க்காவல் இணைய இதழ் தொடக்க விழா

புதுச்சேரி தமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் சார்பில் தமிழ்க்காவல் என்னும் இணைய இதழ் தொடக்கவிழா புதுவைத் தமிழ்ச்சங்க அரங்கில் வரும் 15ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. இணைய உலகில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களைத் தமிழ் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்னும் நோக்கில் இவ்விதழ் வெளியீடும், தொடக்க விழாவும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. கணிப்பொறி, இணையத் தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்துகொண்டு இணையம் பற்றியும், தமிழ் வலைப்பதிவுகள் பற்றியும் விளக்க உள்ளனர்.

நிகழ்ச்சிக்குப் பேராசிரியர் ம.இலெ.தங்கப்பா தலைமை தாங்குகிறார். முனைவர் இரா.திருமுருகனார் தொடக்கவுரையாற்றவும், முனைவர் தமிழப்பன் அவர்கள் நோக்கவுரையாற்றவும் உள்ளனர்.

தமிழ்க்காவல் இதழை வடிவமைத்த பொறிஞர் வே.முருகையன்  வடிவமைப்பு விளக்கம் சொல்ல உள்ளார். நா.நந்திவர்மன், முனைவர் மு.இளங்கோவன், ஏ.வெங்கடேசு ஆகியோர் இணைய வளர்ச்சி பற்றி உரையாற்ற உள்ளனர்.

தி.பா.சாந்தசீலன், இரா.செம்பியன், முவ.பரணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர். நன்றியுரை இரா.இளமுருகன்.

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் உறுப்பினர்கள் அரங்கில் செயல் விளக்கம் வழித் தமிழ் இணையப் பயன்பாட்டை விளக்க உள்ளனர். தமிழ் வளர்ச்சி அறக்கட்டளையினர் அனைவரையும் அழைத்து மகிழ்கின்றனர்.
 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.