07.01.2015-இந்தியர்களின் சமசுகிருத மொழிப்பற்று அமெரிக்காவிலும் சமசுகிருதமொழிவாழுது... தமிழர் இப்படியா தமிழை விட்டு எம்பிள்ளைகளுக்கே ஆதிரா எனப்பெயர் இட்டுள்ளோம்.அமெரிக்காவின், சான்டீகோ வனவிலங்கு பூங்காவில் உள்ள, அரிய வகை வெள்ளை நாகப் பாம்பிற்கு, 'ஆதிரா' என்ற சமஸ்கிருத பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, செப்டம்பரில், கலிபோர்னியாவின் தவுசண்டு ஓக்ஸ் என்ற இடத்தில், வளர்ப்பு நாய் ஒன்று மர்மமான முறையில் திடீரென இறந்தது. அதன் உடலில், பாம்பு கடித்த அடையாளம் இருந்ததை அடுத்து, அப்பகுதியில் வசிப்போர் பீதியடைந்தனர். இதையடுத்து, லாஸ் ஏஞ்சல்ஸ் பிராணிகள் கட்டுப்பாட்டு அமைப்பு, நான்கு நாட்கள் போராடி, ஒரு வீட்டின் கொல்லையில் ஒளிந்திருந்த வெள்ளை நாகத்தை கண்டுபிடித்தது.
அமெரிக்காவின், சான்டீகோ வனவிலங்கு பூங்காவில் உள்ள, அரிய வகை வெள்ளை நாகப் பாம்பிற்கு, 'ஆதிரா' என்ற சமஸ்கிருத பெயர் சூட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, செப்டம்பரில், கலிபோர்னியாவின் தவுசண்டு ஓக்ஸ் என்ற இடத்தில், வளர்ப்பு நாய் ஒன்று மர்மமான முறையில் திடீரென இறந்தது. அதன் உடலில், பாம்பு கடித்த அடையாளம் இருந்ததை அடுத்து, அப்பகுதியில் வசிப்போர் பீதியடைந்தனர். இதையடுத்து, லாஸ் ஏஞ்சல்ஸ் பிராணிகள் கட்டுப்பாட்டு அமைப்பு, நான்கு நாட்கள் போராடி, ஒரு வீட்டின் கொல்லையில் ஒளிந்திருந்த வெள்ளை நாகத்தை கண்டுபிடித்தது.
இதையடுத்து, அந்த பாம்பு, 100 நாட்களுக்கு கால்நடை மருத்துவர்களின் பராமரிப்பில் வைக்கப்பட்டு, பாம்புகளின் விஷத்தை சேகரிக்கும் வசதி கொண்ட, சான்டீகோ வனவிலங்கு பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டது. இந்த பாம்பு செய்தி ஏற்படுத்திய பரபரப்பு காரணமாக, அதற்கு பெயர் சூட்டி, பொதுமக்களின் பார்வைக்கு வைக்க, சான்டீகோ வனவிலங்கு பூங்காவினர் முடிவு செய்தனர். இதற்காக நடத்தப்பட்ட, 'ஆன் லைன்' போட்டியில், அதிக ஓட்டுகளை, 'ஆதிரா' என்ற பெயர் தட்டிச் சென்றது.
இதற்கு, சமஸ்கிருதத்தில், மின்னல் என்று பொருள். மின்னலைப் போல் இந்த பாம்பின் நிறம், வெள்ளையாக உள்ளதால், அதற்கு பொருத்தமாக, இப்பெயர் சூட்டப்பட்டு உள்ளது. நான்கு அடி நீளம் கொண்ட, இந்த 2 வயது பெண் பாம்பு, தென்கிழக்கு ஆசிய வம்சாவளியைச் சேர்ந்தது. அமெரிக்காவில் தன்னை ரகசியமாக வளர்த்து வந்த நபருக்கு, 'டிமிக்கி' கொடுத்து தப்பியிருக்கலாம் என்று கருதப்படுகிறது அல்லது கலிபோர்னியா சட்டத்தில், அனுமதியின்றி பாம்பு வளர்ப்பது குற்றம் என்பதால், அந்த நபர், இந்த பாம்பை ரகசியமாக விடுதலை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. தற்போது, 'ஆதிரா'வை காண கூட்டம் அலைமோதுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.