குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 27 ம் திகதி சனிக் கிழமை .

ராசபக்ச குடும்பத்திற்கு எதிராகவே அமெரிக்கா குற்றப்பத்திரிகை தயாரித்ததாம் பசில் இனிப்பதட்டப்புலம்பல்

திங்கட்கிழமை, 27 ஆனி 2011 07:45    .அமெரிக்க இராயாங்கத் திணைக்களம் ராசபக்ச குடும்பத்திற்கு எதிராக குற்றப் பத்திரிகை ஒன்றையும் தயாரித்திருந்ததாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராசபக்ச தெரிவித்துள்ளார். எம்பிலிபிட்டியவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இலங்கையில் விடுதலைப்புலிகள் ஒழிக்கப்பட்டாலும் வெளிநாடுகளின் உதவியுடன் தப்பிச் சென்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் சிலர், வெளிநாட்டுச் சக்திகள் சிலவற்றின் உதவியுடன் நாட்டை சீர்குலைக்க ஒன்று திரண்டுள்ளனர்.

சில அரச சார்பற்ற நிறுவனங்களும் அவர்களுடன் இணைந்திருக்கின்றன. தற்போது இந்த தீய சக்திகள் ஒன்றுக்குப் பின் ஒன்றாக பல்வேறு சதித் திட்டங்களை செயற்படுத்தி வருகின்றன.

இந்த சதி முயற்சிகளில் ஒன்றுதான் நிபுணர்குழு அறிக்கையின் பின்னர் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் ராஜபக்ச குடும்பத்துக்கு எதிரான குற்றப் பத்திரமொன்றையும் தயாரித்தது.

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டைக் காட்டிக் கொடுத்தவர். ரணில் - பிரபா உடன்படிக்கையின் மூலம் 8 மாவட்டங்களை விடுதலைப் புலிகளிடம் ஒப்படைத்துள்ளார் என்று பசில் ராசபக்ச மேலும் தெரிவித்தார். வேறு நிகழ்வில் சனாதிபதிக்கு ஆலோசனை கூறுபவர்கள் சனாதிபதியைத்தவறாக வழிநடத்துவதாகவும் இதனால் இலங்கை பெரும் நெருக்கடியைச்சந்திப்பதாகவும் கூறியுள்ளார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.