சில அரச சார்பற்ற நிறுவனங்களும் அவர்களுடன் இணைந்திருக்கின்றன. தற்போது இந்த தீய சக்திகள் ஒன்றுக்குப் பின் ஒன்றாக பல்வேறு சதித் திட்டங்களை செயற்படுத்தி வருகின்றன.
இந்த சதி முயற்சிகளில் ஒன்றுதான் நிபுணர்குழு அறிக்கையின் பின்னர் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் ராஜபக்ச குடும்பத்துக்கு எதிரான குற்றப் பத்திரமொன்றையும் தயாரித்தது.
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டைக் காட்டிக் கொடுத்தவர். ரணில் - பிரபா உடன்படிக்கையின் மூலம் 8 மாவட்டங்களை விடுதலைப் புலிகளிடம் ஒப்படைத்துள்ளார் என்று பசில் ராசபக்ச மேலும் தெரிவித்தார். வேறு நிகழ்வில் சனாதிபதிக்கு ஆலோசனை கூறுபவர்கள் சனாதிபதியைத்தவறாக வழிநடத்துவதாகவும் இதனால் இலங்கை பெரும் நெருக்கடியைச்சந்திப்பதாகவும் கூறியுள்ளார்.