குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

சர்வதேசத்துடன் மோதுவதற்கு அஞ்சப் போவதில்லை என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

22.06.2011--மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான சர்வதேச அழுத்தங்கள் நாளுக்கு நாள் உயர்வடைந்து செல்வதாக வெளிவிவகார அமைச்சர் யீ.எல்.பிரிசு தெரிவித்துள்ளார். 30 ஆண்டு போரின் பின்னர் நாட்டில் ஏற்பட்டு வரும் பொருளாதார வளர்ச்சியை தடுத்து நிறுத்த சில சக்திகள் முனைப்பு காட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சதித் திட்டங்கள் தோல்வியிலேயே முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக அரங்கில் இலங்கை தனிமைப்படுத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சீனா, ரஸ்யா போன்ற நாடுகள் இலங்கைக்கு ஆதரவளித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை விவகாரங்களில் வெளிநாடுகள் தலையீடு செய்ய வேண்டிய அவசியமில்லை என்றே சீன மற்றும் ரஸ்ய நாட்டுத் தலைவர்கள் கருத்து வெளியிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஆயுத போராட்டம் நிறைவடைந்துள்ள நிலையில் இராஜதந்திர ரீதியான போராட்டங்கள் ஆரம்பித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாத இல்லாதொழிப்பு மூலம் நாடு அடையக் கூடிய நன்மைகளை தெளிவுபடுத்தி உலக நாடுகளை அரசாங்கத்தின் பக்கம் திருப்பும் முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க நீதிமன்றின் அழைப்பாணை தொடர்பில் ஜனாதிபதி பதிலளிக்க மாட்டார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான அழைப்பாணைகளின் மூலம் ஜனாதிபதியின் அமெரிக்க விஜயங்களை தடுக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 
நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் பதில் எதனையும் அளிக்கப் போவதில்லை – அரசாங்கம்

21-06-2011 
ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் பதில் எதனையும் அளிக்கப் போவதில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.
 
சர்ச்சைக்குரிய நிபுணர் குழு அறிக்கைக்கு பதிலளிக்கப் போவதில்லை என்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை என தெரிவித்துள்ளது.
 
யுத்தத்தின் பின்னர் இலங்கையில் ஏற்பட்ட அபிவிருத்தி தொடர்பில் அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாகவும் இதனை சர்வதேச சமூகம் பார்வையிடக் கூடிய வகையில் பகிரங்கப்படுத்த உத்தேசித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
 
ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் நிபுணர் குழு உருவாக்கப்பட்டதாகவும், அந்த நிபுணர் குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை எனவும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
 
நிபுணர் குழு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்ட போதே அரசாங்கத்தின் நிலைப்பாடு வெளியிடப்பட்டதாகவும், அதில் எவ்வித மாற்றமும் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
நிபுணர் குழு அறிக்கையின் குறிப்பிட்ட சில குற்றச்சாட்டுக்களுக்கு மட்டும் பதிலளிக்கப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.
 
எவ்வாறெனினும், நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் அரசாங்கம் முழுமையான அறிக்கைகளை தயாரித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
வடக்கிற்கான உணவு விநியோகம், மருத்துவ வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
 
இந்த அறிக்கைகளை, ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் ஏனைய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பார்வையிட முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
 
பான் கீ மூனின் நியமனம் தொடர்பில் தனிப்பட்ட ரீதியான குரோதத்தை வெளிப்படுத்துவதில் அர்த்தமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கைக்கு எதிராக செயற்படவில்லை – ஜீ.எல்.
 
ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கைக்கு எதிராக செயற்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
 
படையினருக்கும் அரசாங்கத்திற்கும் எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை ஐக்கிய நாடுகள் அமைப்பு ஏற்றுக்கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
செனல்4 ஊடக ஆவணப்படம் மற்றும் தாருஸ்மன் அறிக்கை போன்றவற்றை ஐக்கிய நாடுகள் அமைப்பு ஏற்றுக்கொள்ளவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
செனல்4 ஊடகத்தினால் வெளியிடப்பட்ட ஆவணப்படம் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
பிரசல்ஸில் ஜீ.எஸ்.பி சலுகைத் திட்ட நீடிப்பு குறித்த பேச்சுவார்த்தைகளின் போது, பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக்குடன் சந்திப்பு நடத்துதற்கு முன்னர், லண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஜனாதிபதி உரையாற்றுவதற்கு முன்னர் மற்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது இலங்கைக்கு எதிரான  குற்றச்சாட்டுக்களை சுமத்தி வீடியோ காட்சிகள் மற்றும் ஆவணங்கள் வெளியிடப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
செனல்4 ஊடக ஆவணப்படம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சும் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவும் விசாரணைகளை நடத்தும் எனவும், குறித்த ஆவணப்படம் n;தாடர்பில் பல்வேறு சந்தேககங்கள் நிலவி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
ஆவணப்படத்தின் துல்லியத்தன்மையை கருத்திற் கொண்டால் அது செல்லிடப்பேசி மூலம் எடுக்கப்பட்டதல்ல என்பதனை விளங்கிக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த வீடியோ காட்சியின் ஒளி ஒலி வடிவங்களின் தன்மையிலும் சந்தேகம் எழுந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
துப்பாக்கிப் பிரயோகம் செய்யும் போது எவ்வித் பின்னணி ஒலியும் கேட்கவில்லை உதாரணமாக பறவைகளின் ஒலி போன்றவை கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
எனவே இந்த ஆவணப்படம் போலியாக தயாரிக்கப்பட்டது என்றே நிபுணர்கள் கருதுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.