குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 28 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

தமிழ்நாடு பொறியியல் கல்லூரிகளில் இலங்கை அகதி மாணவர்களை சேர்க்க அனுமதி இறுதிவாசகங்கள் சட்டச்சிக்கலா?

தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பட்டயப் படிப்பு முடித்து தேர்வு பெற்ற தகுதியான இலங்கை அகதி மாணவர்களை என்ஜினீயரிங் கல்லூரிகளில் நேரடியாக 2 ம் ஆண்டில் சேர்க்க அனுமதி அளிக்கப்படுகிறது.இதுகுறித்து உயர் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் ஆர்.கண்ணன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:

தமிழக பாலிடெக்னிக் கல்லூரிகளில் பட்டயப் படிப்பு முடித்து தேர்வு பெற்ற தகுதியான இலங்கை அகதி மாணவர்களை, மற்ற மாணவர்களோடு அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், நேரடி இரண்டாம் ஆண்டிற்கான என்ஜினீயரிங் பட்டப்படிப்பில் சேர்த்துக் கொள்ளலாமா என்பது குறித்தும், தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் என்ஜினீயரிங் கல்லூரிகளில் பட்டப்படிப்பு முடித்து, தேர்வு பெற்ற தகுதியான இலங்கை அகதி மாணவர்களை மற்ற மாணவர்களோடு சேர்த்துக் கொள்ளலாமா என்பது குறித்தும்  அரசுக்கு தொழில்நுட்பக் கல்வி ஆணையர் கடிதம் எழுதியிருந்தார்.

அவரது கோரிக்கையை நன்கு பரிசீலனை செய்த அரசு, 2011 2012 ம் கல்வியாண்டு முதல் இலங்கை அகதிகள் முகாம்களில் இருந்து என்ஜினீயரிங் கல்லூரிகளில் நேரடி இரண்டாம் ஆண்டில் சேர்க்கை பெற விரும்பும் மாணவர்கள் சம்பந்தப்பட்ட தலைமையிடத்து வட்டாட்சியரிடம் இருந்து பெறப்பட்ட ஆளறிச் சான்றிதழுடனும்,

அகதிகள் முகாம்களில் பதிவு செய்யப் பெறாதவர்கள், அவர்களுடைய விசா மற்றும் கடவுச் சீட்டுடன் விண்ணப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன், என்ஜினீயரிங் கல்லூரிகளில் மற்ற மாணவர் சேர்க்கை முடிவுற்ற பின், அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு மிகாமலும், பொதுப்பிரிவின் கீழ் காலியிடங்கள் ஏதும் இருந்தால் அதில் இலங்கை அகதி மாணவர்களை சேர்க்க அனுமதி அளிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.