வாசிங்டன்: கருங்கடல் பிராந்தியத்தில் உள்ள உக்ரைன் நாட்டின் கிழக்கு பதியான கிரிமீயாவை, ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் சமீபத்தில் வாக்கெடுப்பு நடத்தி ரஷ்யாவுடன் இணைத்துக் கொண்டனர்.
உக்ரைனில் அரசு படைகளுக்கு எதிராக ரஷ்ய பிரிவினைவாதிகள் நடத்தி வரும் உள்நாட்டு போருக்கு ரஷ்ய ராணுவம் மறைமுகமாக உதவி வருகிறது. அத்துடன், உக்ரைன் கடற்பகுதியிலும் கிழக்கு பகுதியிலும் கிட்டத்தட்ட 3 ஆயிரத்துக்கும் அதிகமான ரஷ்ய ராணுவ வீரர்கள் முகாமிட்டு உள்ளனர் என்று உக்ரைன் அரசு குற்றம்சாட்டி வருகிறது. உக்ரைனின் கிழக்கு பகுதியான கிரிமீயாவை ரஷ்யா ஆக்கிரமித்து கொண்டதற்கு அமெரிக்கா உட்பட பல்வேறு மேற்கத்திய நாடுகள் கண்டனம் தெரிவித்ததுடன், ரஷ்யா மீது கடும் பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
இந்நிலையில், கிரிமீயா ஆக்கிரமிப்பு தொடர்பாக ரஷ்யா மீது மேலும் புதிய பொருளாதார தடைகள் விதிப்பது தொடர்பாக நேற்று முன்தினம் ஐரோப்பிய யூனியன் நாடுகளின் தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து, ரஷ்யா ஆக்கிரமித்துள்ள கிரிமீயாவில் அமெரிக்காவின் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்றிரவு தடை விதிப்பதாக அறிவித்தார்.