பூநகரி பொ.முருகவேள் ஆசிரியர் சுவிற்சர்லாந்து. தமிழகம் தமிழாலயம் இதழில்01.07.2008 இல் வெளியானது.
அறிவியலை முட்டிப்பறக்கின்றேன்என்று எண்ணு கின்றான்.
பட்டப்படிப்பை சட்டையாய்ப்போட்டு
பணத்தைக் குவிக்கத்துடிக்கின்றான்.
அடிப்படைத் துாய்மைப் பழக்கத்தை
அடியோடு மறக்கின்றான்.
வீதியைப் பெருக்கும் பெருமகனை
சாக்கடை பேணும் நல்லவனை
விடியலில் காணக் கூடாதென்று
சாக்கடைக் கதைகள் சொல்லி
தாம் மேலானோர் மேலானோர் என்றிடுவர்.
தகாதவன் என்றுபெயரா்பெற்வன் எவன்?
தலைமுடி அலங்கரிப்பவன் சலவைசெய்பவன்
மனிதனுக்கு சேவை செய்பவன்
எதையும் துாய்மையாய் செய்த்துணிந்தவனே
துாயமனிதன் உயர்ந்தமனிதன்.
ஒன்றே குலம் என்பது என்று வாழுமோ
அன்றே தமிழன்னை மகிழ்வாள்.
அன்றே உலகத்தோர் தமிழர்எம்மை
மனிதரென்று எண்ணுவர் ஏற்பர்.