குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

அதி வெப்பமான ஆண்டை நோக்கி செல்லும் பூமி

2014ஆம் ஆண்டு இதுவரை கண்டிராத வெப்ப அளவைக் கொண்டதாக அமையும் என்று அமெரிக்க அமைப்பு எச்சரிக்கை. | படம்: ஏபி.

அதிவெப்பமய ஆண்டை நோக்கி பூமி சென்று கொண்டிருப்பதாக அமெரிக்க தேசிய கடல் மற்றும் வானிலை நிர்வாக அமைப்பு எச்சரித்துள்ளது.

1880-ஆம் ஆண்டு முதல் 7-வது அதிவெப்ப மாதமாக கடந்த நவம்பர் அமைந்துள்ளது.

உலக நிலப்பகுதி மற்றும் கடல் மேற்பரப்பு ஆகியவை இணைந்த சராசரி வெப்ப அளவு நவம்பர் மாதம் 2008-ஆம் ஆண்டுடன் சமநிலை எய்தியுள்ளது. அதாவது 20ஆம் நூற்றாண்டு சராசரியை விட 0.65 டிகிரி அதிகமாக நவம்பரில் பதிவாகியுள்ளது.

செப்டம்பர்-நவம்பர் மற்றும் கடந்த 11 மாத சராசரி வெப்பநிலை அதிகமாக பதிவாகியுள்ளது. அதாவது முன்னெப்போதையும் விட இந்த 11 மாதங்களில் சராசரி வெப்ப நிலை அளவு அதிகமாகியுள்ளது.

20ஆம் நூற்றாண்டு சராசரியைக் காட்டிலும் நடப்பு டிசம்பர் மாதம் குறைந்தபட்சமாக 0.42 டிகிரி செல்சியஸ் அதிகமானால் போதும், 2014ஆம் ஆண்டு அதி வெப்ப ஆண்டாக பதிவாகிவிடும் என்று இந்த அமெரிக்க ஆய்வு தெரிவித்துள்ளது.

சராசரி வெப்பநிலை அதிகரித்தால் நிலநடுக்கங்களுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று ஏற்கெனவே விஞ்ஞானிகள் கூறியிருப்பது இதனுடன் இணைத்து நோக்கத்தக்கது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.