நாடாளுமன்றத்தில் அவர் தனது கன்னி உரையை நிகழ்த்தும் போது,
“நாடாளுமன்றத்திற்கு தெரிவான முதல் தமிழர் என்ற வகையில் இந்த மதிப்பிற்குரிய அவையில் எனது தாய் மொழி தமிழிலில் பேசுவதையிட்டு ஒருங்கே பெருமையாகவும், எளிமையாகவும் உணர்கிறேன்.
தமிழர்களாகிய நாம் ஒடுக்கு முறைகளில் இருந்தும் போர்ச் சூழலில் இருந்தும் தப்பித்தே கனடாவிற்கு வந்திருக்கிறோம். கனடா எம்மை இரு கரம் கொண்டு எம்மை வரேவேற்றது.
நாமும் கனடாவின் பொருளாதார வளர்ச்சிக்கும், பண்பாட்டு வளத்திற்கும் முனைப்போடு பங்காற்றி வருகிறோம்.
இன்று இந்த அவையிலே தமிழ்மொழியில் பேசப்பட்டதை, இந்த மைல்கல் எட்டப்பட்டதை உலகெங்கிலும் பரந்து வாழும் புலம்பெயர் தமிழர்கள் நிச்சயமாக பெருமையடைவர்.
கனடாவில் எமது சமூகத்தின் வளர்ச்சியின் அடுத்தபடி இது.
தமிழர்களின் பிள்ளைகள் எதிர்நோக்கும் தடைகள் தகரும். அவர்கள் கனடாவின் உயர் தலைமைப் பொறுப்புக்களில் முன்னேறுவர்” என்றார்.
ரொறன்ரோ பெரும்பாகத்தில் இடம்பெற்ற நடுவண் அரசுத் தேர்தலில் ஸ்கார்பரோ ரூச் ரிவர் தொகுதியில் முதற்தடவையாக புதிய சனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு 18,856 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.
2008 இல் இடம்பெற்ற தேர்தலில் இக்கட்சி 4,900 வாக்குக்களை மாத்திரமே பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.