உலகப்புகழ் பெற்ற ஆலிவுட் நடிகை. ஏராளமான ஆங்கிலப் படங்களில் நடித்தவர். உலகப் புகழ் பெற்ற கவர்ச்சி நடிகை மர்லின் மன்றோ, அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். "மர்லின் மன்றோ" மர்லின் மன்றோவின் நடை அழகு மிகவும் புகழ் பெற்றது.
உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களின் "கனவுக்கன்னி"யாக விளங்கி வருகிறார். மரணத்தின்போது கோடீசுவரியாக இருந்த மர்லின் மன்றோவின் இளம் பருவ வாழ்க்கை, மிகவும் வறுமையும், சோதனைகளும், துன்பங்களும் நிறைந்ததாக இருந்தது. மர்லின் மறைந்த போது அவரது புகழ் இன்னும் நிலுஇபெற்று இருக்கிரது அடிக்கடி அவரது பொருடகள் ஏராளமான பணத்திற்கு ஏலம் போகின்றன
தற்போது அவரது முன்னாள் கணவர் எழுதிய காதல் கடிதம் மிகப் பெரிய தொகைக்கு ஏலம் போயுள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 48 லட்சத்து 28 ஆயிரத்து 625 ரூபாய்க்கு அந்தக் கடிதம் ஏலம் போயுள்ளது. மர்லினின் முன்னாள் கணவர் பெயர் ஜோ டிமாகியோ. இவர் எழுதிய அந்தக் காதல் கடிதம்தான் அமெரிக்க மதிப்பில் 78 ஆயிரம் டாலருக்கு ஏலம் போயுள்ளது.
ஜூலின்ஸ் ஆக்ஷன்ஸ் என்ற நிறுவனம் இந்த ஏலத்தை நடத்தியது. அதேபோல இன்னொரு முன்னாள் கணவரான ஆர்தர் மில்லர் எழுதிய காதல் கடிதம் 44,000 டாலருக்கு விலை போனது. இந்தக் காதல் கடிதங்களை மர்லினின் நடிப்புப் பயிற்சியாளரும், அவரது குருவுமான லீ ஸ்டிராஸ்பெர்க் இத்தனை காலமாக வைத்திருந்தார். தான் வைத்திருந்த அனைத்தையும் தனது நண்பர் ஒருவரிடம் அவர் மறைவதற்கு முன்பு கொடுத்திருந்தார். அந்த நண்பர்தான் தற்போது அவற்றில் சிலவற்றை ஏலத்தில் விட்டுள்ளார். இதுபோக கருப்பு நிற வெல்வெட் ஓபரா கோட் 93,760 டாலருக்கு விலை போனது. அதேபோல அவரது நெக்லஸ் ஒன்று 34,375 டாலருக்கு விலை போனது.