குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 27 ம் திகதி சனிக் கிழமை .

முதல்வரை சந்தித்த திரை நட்சத்திரங்கள்

 05.06.2011--தமிழக முதல்வர் செயலலிதாவை நடிகர்கள் கமல், பிரபு, விசய் உள்ளிட்டோர் நேரில் சந்தித்துப் பேசினர் இத்தகவல் தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர்கள் கமல், பிரபு, விஜய், துஷ்யந்த், வி.எஸ். ராகவன், இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர், நடிகைகள் கெளதமி, சுகுமாரி, சச்சு, ராஜஸ்ரீ, காஞ்சனா, பின்னணி பாடகி எல்.ஆர். ஈஸ்வரி உட்பட திரையுலகைச் சேர்ந்த ஏராளமானோர் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தனர்.

மூன்றாவது முறை முதல்வராக பதவி ஏற்றதற்கும், பல நல்ல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருவதற்கும் அவர்கள் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர். திரையுலகினர் நேரில் வந்து சந்தித்துப் பாராட்டியதற்கு முதல்வர் நன்றி தெரிவித்தார்.

 மகளுடன் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார் கருணாநிதி

தி.மு.க தலைவர் கருணாநிதி தனது 88வது பிறந்த நாளை தனது மகள் கனிமொழியுடன் கொண்டாட முடிவு செய்துள்ளார்.
இதற்காக அவர் விமானம் மூலம் இன்று டெல்லி செல்கிறார். பிறந்தநாளை ஒட்டி அவர் தொண்டர்களுக்கு தெரிவித்துள்ள செய்தியில்,"கூடாநட்பு கேடு தரும்" என குறிப்பிட்டுள்ளார்.

சமூக வளர்ச்சிக்கும், அரசியல் மறுமலர்ச்சிக்கும் பாடுபடும் தி.மு.க தொண்டர்கள் கூடா நட்பை தொடர்ந்தால் கேடாக முடியும் என்று கூறியள்ளார். தேர்தல் தோல்வி, கனிமொழி கைது ஆகிய சம்பவங்களால் கசப்பில் இருக்கும் தி.மு.க - காங்கிரஸ் உறவுக்கு இது மறைமுக உணர்த்துதல் என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக அவர் அண்ணாதுரை சமாதிக்குச் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பெரியார் நினைவிடத்திலும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

சென்னை கோபாலபுரத்தில் இருக்கும் அவரது வீட்டில் திரண்ட தி.மு.க தொண்டர்கள் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்தனர். தி.மு.க சட்டசபை தலைவர் ஸ்டாலின், அன்பழகன், துரைமுருகன், பொன்முடி ஆகிய கட்சியின் மூத்த தலைவர்களும் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.