குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 8 ம் திகதி புதன் கிழமை .

கற்பழிப்பு புகாரில் சீமான்கிளின்ரனை அமெரிக்க அறிவுசால் மக்களும் உலகும் ஒதுக்கவில்லைத்தானே தமிழா!

  05.06.2011த.ஆ.2042--இரு நாட்களுக்கு முன்பு கா.துறை அதிகாரி திரிபாதியை சந்தித்து புகார் தெரிவித்த வியயலட்சுமி அன்று புகார் மனுவை மட்டும்தான் கொடுத்திருந்தார்.  சீமானுடன் பழகியது தொடர்பான ஆதாரங்கள் எதையும் அவர் கொடுக்க வில்லை. இதன் பிறகு அவரிடம் விசாரணை நடத்திய போது, சில ஆதாரங்களை அவர் கா.து.அதிகாரியிடம். வழங்கியுள்ளார்.
நாம் தமிழர் கட்சி தலைவர் டைரக்டர் சீமான் மீது, பரபரப்பான குற்றச்சாட்டுகளை தெரிவித்து நடிகை விஜயலட்சுமி போலீசில் புகார் அளித்தார். கடந்த 3 ஆண்டுகளாக சீமான் என்னுடன் பழகினார். திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இது தொடர்பாக வளசரவாக்கம் கா.துறை-அதிகாரி சீவானந்தம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கற்பழிப்பு உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2 நாட்களுக்கு முன்பு கா.து அதிகாரி திரிபாதியை சந்தித்து புகார் தெரிவித்த வியயலட்சுமி அன்று புகார் மனுவை மட்டும்தான் கொடுத்திருந்தார். சீமானுடன் பழகியது தொடர்பான ஆதாரங்கள் எதையும் அவர் கொடுக்க வில்லை. இதன் பிறகு அவரிடம் விசாரணை நடத்திய போது, சில ஆதாரங்களை அவர் போலீசிடம் வழங்கியுள்ளார். எசு.எம்.எசு. மற்றும் செல்போன் உரையாடல் பதிவுகளை முக்கிய ஆதாரங்களாக வியயலட்சுமி கொடுத்துள்ளதாக கா.அதிகாரி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கா.து- விசாரணையில் வியயலட்சுமி, சீமானுடன் நான் வெளியில் சென்று தங்கியுள்ளேன் என்று கூறியுள்ளார். இதற்கான ஆதாரங்களையும் அவரிடம் போலீசார் கேட்டுள்ளனர். இது தொடர்பாக விரிவான விளக்கங்கள் கேட்டு விஜயலட்சுமிக்கு சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளனர். வியயலட்சுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, திரட்டப்பட்ட தகவல்கள் அனைத்தையும், வாக்குமூலமாக போலீசார் பதிவு செய்துள்ளனர்.

இதன் அடிப்படையில் சீமானிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக அவருக்கு சம்மன் அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர். அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டிருக்கும் தேதியில் சீமானிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. விஜயலட்சுமியின் புகார் தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, இந்த வழக்கை பொறுத்தவரை எடுத்தோம் கவிழ்த்தோம் என செயல்பட முடியாது.

புகாரில் விஜயலட்சுமி குறிப்பிட்டுள்ள இடங்களுக்கு சென்று விசாரணை நடத்த உள்ளோம். சீமானிடமும் விரைவில் விசாரணை நடத்தப்பட உள்ளது. விஜயலட்சுமி அளித்த புகாரின் உண்மை தன்மையை பொறுத்து இந்த வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.