திருக்குறள், பாரதியார், பாரதி தாசன் கவிதைகள் மற்றும் புகழ்பெற்ற தமிழ்நூல்கள் ஆங்கிலம், சீன, அரேபிய மொழிகளிலும் மற்றும் உலகில் அதிகம் பேசப்படும் ஏனைய மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்படும். இவற்றை இணைய தளத்தில் இடம்பெற செய்து தமிழ்மொழியின் பெருமை உலகமெலாம் பரவ வழி வகை செய்யப்படும்.
கணினி வழித் தமிழ் வளர்ச்சிக்கும் ஆராய்ச்சி மேம்பாட்டிற்கு போதிய நிதி ஒதுக்கப்படும். தமிழ்ப் பல்கலைக்கழகம் தனி தன்மையை இழந்துவிட்டதால் அதனையும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங் களையும் மீட்டெடுக்க நடவடிக்கைகள் மேற்கொள் ளப்படும்.இவ்வாறு ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது.