04 .06. 2011த.ஆ.2042-- .பயங்கரவாத இல்லாதொழிப்பு குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு இலங்கை விடுத்த அழைப்பினையும், அமெரிக்கா நிராகரித்துள்ளது.
எனினும், இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் பாதுகாப்பு பொறுப்பாளர் கேணல் லோரன்ஸ் ஸ்மித், இந்த மாநாட்டில் கலந்து கொண்டார்.
கண்காணிப்பாளராக இந்த மாநாட்டில் ஸ்மித் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மாநாட்டில் கலந்து கொண்டதன் பின்னர் ஸ்மித் வெளியிட்ட கருத்துக்கள் தனிப்பட்ட கருத்துக்கள் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
யுத்தக் குற்றச் செயல் தொடர்பான ஆதாரங்கள் தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக ஸ்மித் தெரிவித்திருந்தார்.
சரணடைய வந்த புலி உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியான தகவல்களின் நம்பகத் தன்மை குறித்து சந்தேகம் எழுந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இந்தக் கருத்துக்கள் தனிப்பட்ட கருத்துகள் எனவும் இது அமெரிக்காவின் நிலைப்பாடாகாது எனவும் அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.
யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தொடர்ந்தும் அமெரிக்கா கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.