குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 15 ம் திகதி புதன் கிழமை .

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் கோவைக்காய்

கோவையின் இலை, காய், கனி, தண்டு, வேர் என எல்லாப் பாகங்களும் மருத்துவ குணம் கொண்டது. கோவைப் பழங்கள் தொழுநோயை தீர்க்கும் வல்லமை பெற்றதாகும். அது மட்டுமல்லாமல் ஆஸ்துமா, மூச்சிரைப்பு, மஞ்சள் காமாலை ஆகியவற்றுக்கும் சிறந்த மருந்து. இயல்பாகவே கோவைச் செடியில் 'குளுக்கோஸ்-6 பாஸ்பேடஸ்' என்னும் வேதிப்பொருள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. குளுக்கோஸ்-6 தான் கல்லீரலில் உற்பத்தியாகி, நம் உடலின் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. கோவைப் பழத்தை உண்டால் பல் வலி கூட குறையுமாம்.

கோவை இலைச்சாற்றுடன் வெண்ணெய் சேர்த்து புண்களுக்குப் பூசலாம். இதன் இலைச்சாற்றைப் பருகி வந்தால் நீரழிவு நோய் கட்டுப்படும்.

கோவையின் ஒரு பிடி இலையை நீரில் நசுக்கிப் போட்டு, அதனை சுண்டக் காய்ச்சி தினமும் இரண்டு வேளை பருகி வந்தால், உடல் சூடு குறைந்து குளிர்ச்சியாகும். கண் எரிச்சல் நீங்கும். இருமல், நீரடைப்பு, சொறி சிரங்கு, புண் ஆகியவை குணமாகும்.

இதன் காரணமாகத்தான் அந்த காலத்தில் அம்மன் கோவிலில் ஊற்றப்படும் இலைக் கஞ்சியில், கோவைக் கொடியின் இலையையும் சேர்ப்பதுண்டு.

கோவைக்காயை அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டால் நீரிழிவு நோய் வராமல் தடுக்க முடியும். வாய்ப் புண்ணை போக்கும் தன்மை கோவைக்காய்க்கு உண்டு.

சர்க்கரை அளவை குறைக்கும் தன்மை கொண்டது என்பதால், பொதுவாக கர்ப்பிணி பெண்களும், தாய்ப்பால் கொடுப்பவர்களும் கோவையின் பாகங்களை உண்பதை தவிர்ப்பது நல்லது என்கிறார்கள். பொதுவாக கோவைக்காய் எண்ணெய் வறுவலாகவும், கதம்ப சாம்பார் எனப்படும் பல்வகைக் காய் சாம்பாருக்கும் பயன்படுத்துவது வழக்கம்.

நன்கு கனிந்த இனிப்பு வகை கோவைப்பழங்களை எடுத்துக்கொண்டு, சர்க்கரை மற்றும் ஐஸ் துண்டங்களை சேர்த்து மிக்சியில் அடித்து பின்னர் வடிகட்டி சாப்பிட உடலுக்கு நன்மை தரும் பானமாக இருக்கும்.