சுவிட்சர்லாந்தில் உள்ள மக்கள் மாத கடைசியில் பணம் இல்லாமல் மிகவும் தவிக்கும் நிலைக்கு தள்ளப்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
சுவிஸ் வசதிமிக்க நாடாக திகழ்ந்து வந்தாலும், மக்கள் தொகையில் 27 சதவிகித மக்கள் மாத கடைசியில் வாழ்வது சிரமமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கடந்த திங்கள்கிழமை அன்று ஐரோப்பிய நுகர்வோர் கட்டண அறிக்கை வெளியிட்டுள்ளதில், நேர்காணல் செய்யப்பட்டதில் 45 சதவிகித மக்கள் கடந்த 6 மாதங்களாக தங்களது பில்களை உரிய நேரத்தில் கட்டமுடியவில்லை என தெரிவித்துள்ளனர்.
இதில் 4 நபர்களில் ஒருவர் தங்களின் செலவுகள் போக, தங்கள் கைகளில் மிச்சம் எந்த பணமும் இருப்பதில்லை என கூறியுள்ளனர்.
சுவிஸ் மக்களுக்கு மருத்துவ செலவு, அன்றாட தேவைகளுக்கான செலவு மற்றும் காப்பீடு போன்றவை தான் மிகுந்த செலவாக விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் பங்கேற்ற 60 சதவிகித மக்கள் தங்களது செலவுகள் போக மாதத்தில் சிறிய அளவில் பணம் சேமித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.