ஆஸ்திரியா: ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த கரன்ஸா என்ற பெண் ஐஸ்கீரிம் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தனது கணவரரை 2008ம் ஆண்டும், காதலனை 2010ம் ஆண்டிலும் சுட்டுக் கொலை செய்து தனது ஐஸ்கிரீம் பார்லரில் புதைத்துவிட்டதாக கூறப்படுகிறது. இவரது கணவர் விவாகரத்து பெற்ற பின்னும் வீட்டை விட்டு செல்ல மறுத்ததால், அவரை துப்பாகியால் சுட்டு கொன்றுள்ளதாகவும், மேலும் அவரது காதலன் குடித்து விட்டு வருவதாகக் கூறி அவரையும் கரன்ஸா துப்பாகியால் சுட்டுக் கொலை செய்துள்ளார். பின்னர் உடல்களை தனது ஐஸ்கீரிம் பார்லரில் புதைத்துவிட்டு, மூன்றாவதாக நபர் ஒருவருடன் உல்லாசமாக வாழ்ந்து வந்துள்ளார். புதைக்கப்பட்ட உடல்களை அவரது க பார்லரில் பணிபுரிபவர் பார்த்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
இதனையடுத்து போலீசார் கரன்ஸாவை கைது செய்தது விசாரணை நடத்தி, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி கரன்ஸாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.