குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

எனக்கு தூக்கம் தூக்கமாக வருது: ரஷ்ய அதிபர் அறிவிப்பால் பரபரப்பு

பிரிஸ்பேன்:ஜி 20 நாடுகளின் மாநாட்டில் பங்கேற்ற, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், முன் கூட்டியே புறப்பட்டுச் சென்றது, பரபரப்பை ஏற்படுத்தியது. ''எனக்கு தூக்கம், தூக்கமாக வருகிறது. அதிக தூரம் பயணம் செல்ல வேண்டியிருப்பதால், விரைவாக புறப்படுகிறேன்,'' என, அவர், இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.ஜி 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு, ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடந்தது. இதில், ரஷ்ய அதிபர் புடினும் பங்கேற்றார். இந்த மாநாடு துவங்குவதற்கு முன், பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் பிரதமர்கள், ரஷ்ய அதிபர் புடினின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்தனர்.

'உக்ரைன் விவகாரத்தில் தேவையின்றி தலையிடுவதை நிறுத்த வேண்டும். அண்டை நாடுகளுடன் வலுக்கட்டாயமாக போருக்கு செல்வதை கைவிட வேண்டும்' என, அவர்கள் கூறினர்.இந்நிலையில், மாநாடு இன்று முடிவடைந்தது. இது தொடர்பான இறுதி அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்பே, புடின், ரஷ்யாவுக்கு புறப்பட்டுச் சென்றார்.மற்ற நாடுகளின் தலைவர்களின் விமர்சனம் காரணமாகவே, புடின், முன் கூட்டியே கிளம்பிச் சென்றதாக தகவல் வெளியானது.இதுகுறித்து, புடின் கூறியதாவது; ஜி 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற மாநாடு, நல்ல முறையில் நடந்தது. உறுப்பு நாடுகளுக்கு இந்த மாநாடு, மிக உதவிகரமாக இருக்கும். பிரிஸ்பேனிலிருந்து, ரஷ்யாவின் மாஸ்கோவுக்கு செல்வதற்கு, 18 மணி நேரம் ஆகும். இதன்பின், மாஸ்கோவில் அதிபர் மாளிகைக்கு சென்று பணிகளை கவனிக்க வேண்டும். இது, மிகவும் களைப்பை ஏற்படுத்தும். எனவே, முன் கூட்டியே கிளம்பிச் செல்வதன் மூலம், நன்றாக தூங்குவதற்கு நேரம் கிடைக்கும். தூங்குவதற்காகவே, முன் கூட்டியே கிளம்புகிறேன். மற்ற எந்த காரணமும் இல்லை.இவ்வாறு, அவர் கூறினார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.