குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 28 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

பேரினவாதப்பூதமே!! வெகுவிரைவில் சிறைப்படும்

சட்டங்கள் நியாயங்கள் எல்லாம் மனிதன் வாழ்வதற்கு மனிதனாலேயே உருவாக்கப்பட்ட ஒன்று ஆகும் ஆனால் அது சமநிலையியே சாதி மதம் இனம் மொழி என்ற எந்த ஒரு வேறுபாடுகளாலும் பிரித்துப் பார்க்கப்படாது ஒட்டுமொத்த மனித குலத்துக்குமே பொதுவான ஒன்று என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. இலங்கைத் தீவுக்குள் தமிழ் மக்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிய விலங்குகளாய் சுதந்திரம் அடைந்ததாகக் கூறப்படும் நாட்கள் தொடக்கம் இன்று வரை கேள்விக்குறி
ஆக்கப்பட்ட ஒரு வாழ்க்கையினையே வாழ்ந்துகொண்டிருக்கின்றனர் இதுவரை தமிழர்கள் கண்ணீரிலும் இரத்ததிலும் குளிந்தவண்ணமே எதிர்காலத்தை எட்டி பார்த்தபடி ஆவலுடன் காத்திருந்தனர் ஆனால் இன்று எம் இனத்தின் விடியலின் அறிகுறியாய் 13ஆவது திருத்தசட்டத்தின் அடிப்படையிலே மாகானசபைத் தேர்த்தல் நடைபெற்று முடிந்து

கடிகாரத்தின் முட்களை நிறுத்தி விடுவதைப்போல காலத்தின் மாற்றத்தை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதை சிங்களப் பேரினவாதம் மறந்துவிட்டது கோழைத்தனமான யுத்தத்தை நடாத்தி அதில் வெற்றிகொண்ட இலங்கை அரசும் சிங்கள பேரினவாதமும் இன்று வீரர்களாக தம்மை அடையாள படுத்தி கொக்கரிக்கின்றனர் இலங்கை அதிபர் மகிந்தர் தன்னை நவீன துட்டகாமினியாக அடையாளப்படுத்தி காலம் காலமாக தமிழினத்தின் கடிவாளத்தை தன் கைப்பிடியில் வைத்துக் கொள்ளலாம் என நினைத்து நில ஆக்கிரமிப்பினையும் கலாச்சார சீர்கேடுகளையும் கடிவாளம் இல்லாது களமிறக்கி தமிழினத்தின் கண்ணீரிலே நீச்சல் அடித்துக்கொண்டிருக்கின்றது சிங்கள தேசம்.

 

 

உண்மையில் வரலாறுதானே எங்களின் வழிகாட்டி கி.பி இரண்டாம் நூற்றாண்டிலே தமிழன் தன் நிலத்தினை இழந்து கிட்டத்தட்ட 300வருடங்கள் வாழ்ந்தான் ஆனாலும் ‘யாமார்க்கும் குடியல்லோம்’ என்று மீண்டும் கி.பி ஐந்தாம் நூற்றானிலே தமிழன் தன் தாயகத்தினை மீண்டும் தன் பிடிக்குள் கொண்டுவந்தான் அதேபோல எல்லாளானை துட்டகாமினி வென்றதோடு தமிழினம் அடிமைப்பட்டுப் போனதா என்ன?எல்லாளனின் வீழ்ச்சியுடன் ஈழத்தில் தமிழர்களின் இருப்பு முடிவுக்கு வந்துவிடவில்லை. எல்லாளனுக்குப் பின்னர் சேனன், குத்திகன் என்ற இரண்டு தமிழ் மன்னர்கள் எழுச்சிக் கொண்டு சிங்களத்தை வெற்றிகொண்டார்கள்: ஈழத்தீவு முழுவதையும் ஆண்டார்கள். செண்பகப் பெருமாள் என்ற தமிழ்த் தளபதியை தனது புதல்வனாகத் தத்தெடுத்து கி.பி 1450ஆம் ஆண்டில் அவனது தலைமையில் யாழ்ப்பாண இராச்சியத்தை ஆறாம் பராக்கிரமபாகு கைப்பற்றிய பொழுது தமிழர்களின் இராச்சியம் முடிவுக்கு வந்துவிடவில்லை. அன்று தந்திரோபாயமாக தமிழ் நாட்டிற்குப் பின்வாங்கிச் சென்ற யாழ்ப்பாணத் தமிழ் மன்னன் கனகசூரிய சிங்கையாரியன் பதினேழு ஆண்டுகளுக்குப் பின்னர் 1467ஆம் ஆண்டு மீண்டும் படையோடு வந்து யாழ்ப்பாண இராச்சியத்தை மீட்டெடுத்தான்

 

இது எல்லாமே மாற்றானை வெகுநாட்கள் தமிழன்னை சுமக்கமாட்டள் என்ற உண்மையினை பறைசாற்றி நிற்கின்றது.
இன்று அரச ஆதரவுடன் புதிது புதிதாக எத்தனையோ சிங்களப் பேரினவத அமைப்புக்கள் உருவாக்கப்படுகின்றன .எங்குபார்த்தாலும் புத்தர் சிலைகளும் விகாரைகளும்
இவை எல்லாமே தமிழினத்தின் இருப்பை அழித்துவிடும் என்பதிலே மாற்றுக்கருத்துக்கள் எதுவும் இல்லை. புகைவன்டிகளிலும் பஸ்வண்டிகளிலும் சிலர் தமது ஆசனத்தில் இருந்து எழுந்து கடைகளுக்கோ அல்லது மலசலகூடத்திற்கோ சொல்லும்போது தோளிலிருக்கும் துண்டை அல்லது கையில் இருக்கும் பைகளை தமது ஆசனதில் போட்டுச்செல்வர் அதில் யாரும் அமர்ந்துவிடக்கூடது என்பதற்காக அதேபோல ஒரு செயல்தான் இந்த புத்தர் சிலையும் பௌத்த விகாரைகளும் சிங்களவர்கள் தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமிப்புச்செய்வதற்கு மிகவும் ஒரு சிறந்த உபகரனமாக இந்த புத்தர்சிலைகளை பயன்படுதிக்கொள்கின்றனர் என்பது காலம் சொல்லும் உண்மை

 

 

ஆரம்பதில் புத்தர்சிலை உருவாக்கப்படுகிறது அதைத்தொடர்ந்து அது புனித்தப்பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டு அங்கே தமிழர்கள் செல்ல அனுமதி மறுக்கபட்டு பௌத்தவிகாரை உருவாக்கப்படுகிறது அதனைத்தொடர்ந்து அந்த விகரைக்கான விகாராதிபதிக்கான தங்குமிடம் அமைக்கபடும் அத்தோடு நின்றுவிடாது அங்கே அந்த விகரையினை மையப்படுத்தி சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டு அது சிங்களக் கிராமாமாக மாறிவிடுகின்றது இதேமுறையில்
பலகிரமங்கள் இன்று சிங்களக் கிராமமாக மாறியுள்ளதை பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

அரச பயங்கரவாதம் தன் கொடிய கரங்களால் தமிழர்களை சீண்டிய வண்ணமே உள்ளது. இலங்கைத் தீவில் சிங்கள பேரினவாதிகளின் கீழ் தமிழ் மக்கள் வாழும்வரை இது தொடர்ந்துகொண்டே இருக்கும் .சிங்களப் பேரின வாதப் பூதம் ஒட்டு மொத்த தமிழினத்தின் இரத்ததினை குடிக்கும் வரைக்கும் ஓய்ந்து
போகாது என்பதை வரலாற்றில் தமிழர்கள் உணர்ந்துகொண்ட உண்மை

 

 

இதற்கு உதாரணமாக இலங்கையின் ஆட்சியாளர்களும் ஆட்சிபீடத்தில் இருக்கும் அமைச்சர்களும் அவ்வப்போது சிலமிரட்டல்களையும் உருட்டல்களையும் விடுத்தவண்ணம்
உள்ளது மட்டுமல்லாது சிங்கள மக்களிடையே இனத் துவேசத்தையும் பேரினவாத கொள்கைகளையும் விதைத்த வண்ணமே உள்ளனர். உதாரணமாக கடந்தமாதம் சம்பிக்க ரணவக்க என்ற அமைச்சர் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்ற காலத்திலே “தமிழ்மக்கள் ஆசைப்பட்டால் நாங்கள் இன்னும் ஒரு நந்திக்கடலைக்கூட தருவதற்கு தயாராக உள்ளோம் ” என்று ஒரு கருத்தினை சொல்லியிருந்தார் .உன்மையில் அது ஒரு மிரட்டலான தொனியிலே விடுக்கப்பட்டது என்பது மட்டும்
உண்மை. உண்மையிலே இந்த கருத்தானது மீண்டும் தமிழர்களை போர்களம் நோக்கி அழைக்கின்றதேaaa462 இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டுமே என்று எந்த ஆட்சியாளரும் அக்கறை கொள்ளவில்லை ஏனென்றால் இவர்களால் எங்களுக்கு இன்னொருமுறை நந்திக்கடலை தரமுடிந்தால் எங்களால் இன்னுமெரு ஆணையிறவு இன்னுமொரு கட்டுநாயக்கா முல்லைத்தீவு என்று தொடர்ச்சியாக தரமுடியாதா?

 

வடக்கில் உள்ளவர்கள் எல்லோருமே அழிக்கப்பட வேண்டியவர்கள் எல்லோருமே புலிகள் என்று அடிக்கடி சிங்களவர்களின் அடாவடித்தனத்திற்கு பலம் சேர்க்கும் அமைச்சர்களும் அதிகம் அதே போல முதலமைச்சர் சி.வீ விக்கினேஸ்வரன் அவர்களை கொழும்புக்குள் அனுமதிக்கக் கூடாது என்று சில அமைப்புக்களும் தாடி வைத்த புலி வேட்டி கட்டிய பிரபாகரன் என்றும் எத்தனையோ விமர்சனங்களும் எதிர்ப்புக்களும் எழுந்துள்ளமை ஆச்சரியப்படுவதற்கல்ல அதுமட்டுமல்லாது சில வெளிநாட்டார்களையும் கூட வெள்ளைப்புலிகள் என்றும் வர்ணிப்பார்கள் இதற்கான காரணம் யாரெல்லாம் தமிழர்கள் பிரச்சனைகளில் அக்கறை காட்டுகின்றார்களோ அவர்கள்மீது புலிமுத்திரை குற்றுவதும் பயங்கரவாதி என்று தூற்றுவதும் சிங்கள ஆட்சியாளர்களுக்கு பரீட்சமான ஒன்று

 

போர் நடைபெற்ற காலங்களில் இருந்து இன்றுவரைக்கும் பஞ்சம் பசி எல்லாம் தமிழன் நிலத்திலே தலைவிரித்து தாண்டவம் ஆடியபோதெல்லாம் புலம்பெயர்ந்த அண்ணன் தம்பிகளும் யார் என்று தெரியாதவர்களும் தாயகத்து மக்களின் பட்டினித் தீயினை அணைத்துவிட கிள்ளிக்கொடுக்கவில்லை அள்ளி அள்ளி அன்பேடு கொடுத்தார்கள் அதிகார வர்கத்தினர் ஆயிரம் ரூபாவிற்கு அரிசி விற்றபோதும் அதைவாங்கி பசிதீக்க அள்ளி அள்ளி கொடுத்த புலம்பெயர் அமைப்புக்களை எல்லாம் பயங்கரவாத அமைப்புக்கள் என்றும் புலிகள் என்றும் தடைசெய்த சிங்களதேசம் பொதுபலசேனா ஜாதிககெல உறுமய தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் என்று இன்னும் எத்தனையோ பௌந்த சிங்கள பேரினவாத அமைப்புக்களை வளர்த்த வண்ணம் உள்ளது

 

 

ஆனால் இது எல்லாம் இன்னும் சொற்ப நாட்களுக்கு என்பது சிங்களப் பேரினவாதம் நினைவிற் கொள்ளவில்லை தமிழர்களின் வரலாற்றிலே போர்களம் என்பது தமிழனுக்கே உரித்தான ஒன்று தமிழர்களின் வீடுகளும் கானிகளும் கையகப்படுத்தப்பட்டால் தமது இருப்புக்களை தக்கவைக்க
முடியும் என்று சீருடைக்கார சிப்பாய்கள் நினைத்தால் உடல் சிதறிச் சாகவேண்டிய நிலை ஏற்படும் காரணம் இடிக்கப்படும் ஒவ்வொரு வீடுகளும் வியர்வையிலும் இரத்தத்திலும் கலந்து கட்டப்பட்டது மன்னுக்காய் மடிந்துபோவதை பெருமையாக நினைப்பது தமிழினம் பரம்பரை பரம்பரையாய் பூர்வீகமாய் வாழ்ந்த நிலங்களை ஆக்கிரமிப்பதால் தமிழர்கள் அடிவயிற்றில் அறுபது ஆண்டுக்குமேலாக எரியும் நெருப்பு நிச்சயாமாய் மீண்டும் அக்கினிக் குஞ்சுகளாய் அவதாரம் எடுக்கும் அச்சம்  தவிர்க்கும் ஆக்கிரமிப்புக் காரர்களின் ஆணிவேரையே அறுத்து எறியும்

 

 

ஆணிவேரை வெட்டிவிட்டதாக இறுமார்ந்து போன சிங்கள தேசம் புதிது புதிதாக தளைக்கும் விழுதுகளை அறுத்தெறிய முடியாது ஆத்திரமைடைகின்றது. தடை தடை என்று சிங்களம் பேடும் தடைகளையெல்லாம் தமிழனுக்கு படிகளாக மாறிக்கொண்டிருக்கும் காலம் இது ஒட்டுமொத்த தமிழ் அமைப்புக்களையும் பயங்கரவாத அமைப்புக்கள் என்று தடைசெய்த மறுகணமே அங்கே புலம் பெயர்ந்து அகதிகளாக வாழ்ந்துகொண்டிருந்த அத்தனை தமிழர்களுக்கும் அந்த அந்த  நாடுகள் குடியுரிமை கொடுக்கத் தொடங்கியுள்ளது .இன்று தமிழர்களில் பலமே புலம்பெயர் உறவுகளே அவர்களின் தொகை அதிகரிக்க அதிகரிக்க சிங்களதேசம் பல அழுத்தங்களுக்குள் சிக்கிக்கொள்ளும் ஆத்திரக்காரனுக்கு புத்தி மத்திமம் என்ற கூற்றினை சிங்களம் நீரூபித்துக் கொண்டுள்ளது
முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்து ஐந்து ஆண்டுகள் நெருங்கிவிட்டபோதும் நாங்கள் எங்கள் உறவுகளுக்காய் இன்னமும் கண்ணீர்விட்டு கதறி அழவில்லை அழுவதற்கு கூட இங்கே அதிகாரம் அற்றவர்களாக எங்களை அடக்குமுறை அரக்கர்கள் அடிமைப்படுத்தியுள்ளார்கள். ஆனால் இந்த நிலை தொடருமா? அவலங்கள் நீழுமா? கண்ணீரும் இரத்தமுமே எங்கள் வரலாற்றின் வரைவிலக்கணமா? அடக்குமுறைக்கும் அதிகார வர்கத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும் இளையசமூகம்
இன்னொருமுறை எழுச்சி கொள்ள வேண்டும் பேரினவாதிகளின் முக மூடிகளைக் கிழித்தெறிய வேண்டும் ஆயுதங்களுக்குப் பதிலாக இனி எழுதுகோல்கள் தூக்கப்பட
வேண்டும்

குருதிக்கு பதிலாக வியர்வையிலே குளிக்க வேண்டும் சமாதிக்குள் கட்டப்பட்ட சமத்துவத்தை நிலைநாட்ட ஒவ்வொரு தமிழனும் இனி அறப்போர் செய்யவேண்டும் அச்சம் தவிர்க்கவேண்டும்

கொள்ளையும் கொலையும் கொடிங்கோல் ஆட்சியும் செய்த சிங்களதேசம் உலக அரங்கிலே நிரபராதிகளாகவும் வீரர்களாகவும் தலைநிமிர்ந்து நடக்கும்போது பாதிக்கப்பட்ட தமிழர்கள் மட்டும் பயங்கரவாதிகளாகவும் தேசத்துரோகிகளாகவும் தூற்றப்படுவது எத்தனை காலம் சத்தியவான்கள் சாகலாம் சத்தியம் செத்துவிடப்போவதில்லை சட்டப்புத்தகத்தினை மாற்றி மாற்றி எழுதிக்கொண்டாலும் சத்தியத்தை மாற்றமுடியாது கைப்புண்ணுக்கு கண்ணாடி காட்டி கதறி அழும் தமிழினம் ஓர்நாள் விடுதலை பெறும் பயங்கரவாதிகள் என்று தூற்றப்படும் வீரர்கள் எல்லோரும் சுதந்திரப் போராளிகளாக போற்றப்படுவார். தமிழனின் வெற்றிக்கொடி நிலவைக்கூட உரசிப்பறக்கும் செங்களத்திலே தமிழனுக்கு செய்த கொடுமைகள் எல்லாம் சிங்களப்பேரினவாதம் சந்ததி சந்ததியாய்

சுமக்கும் தமிழனுக்கு தடைவிதித்தவன் தன் நாட்டுக்குள்ளே முடக்கபட்டு சிறைவைக்கப்படும் காலம் வெகு விரைவில் ………