பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி மெரினா கடற்கரை, சாந்தோம் கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை மற்றும் அண்ணாநகர் டவர் பூங்கா, திரு.வி.க. பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெருந்திரளான அளவில் காதலர்கள் ஒன்று கூடி தங்கள் அன்பை பகிர்ந்து கொள்வார்கள். இதற்காக மலர்க்கொத்து கொடுத்தல், நினைவுப்பரிசு வழங்குதல், காதல் இணைக்கு பிடித்த பரிசுகளை வழங்குதல் என விதவிதமாக காதலர்கள் இந்த தினத்தை கொண்டாடுவார்கள். காதலர் தினம் என்ற பெயரில் சில இளைஞர்கள் மது அருந்துதல் மற்றும் இளம் பெண்களிடம் வரம்பு மீறுதல் போன்ற செயல்களிலும் ஈடுபடுவது உண்டு.
இத்தகைய அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்கும் முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக காதலர்கள் அதிக அளவில் ஒன்று கூடும் பூங்காக்கள், கடற்கரைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சென்னை முழுவதும் இரண்டாயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப் பட்டு உள்ளனர்.
கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இப் போலீசார் வரம்பு மீறும் காதலர்களை எச்சரித்து அனுப்பும் பணியில் ஈடுபடுவார்கள். அத்துடன் காதலர் தினத்தை பயன்படுத்தி விஷமச் செயல் மற்றும் சமூக விரோத செயல் களில் ஈடுபடுவோர் மீது இவர்கள் கடும் நடவடிக்கையும் எடுப்பார்கள்.