குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 15 ம் திகதி புதன் கிழமை .

கைக்குத்தல் அரிசி உணவை சாப்பிடுவதால் உண்டாகும் 12 நன்மைகள்! உங்கள் குழந்தை உயரமாக வேண்டுமா?அலறவைக்

05.11.2014-கும் ஆசுதுமா.. என்ன தீர்வு?பழுப்பு அரிசிபழுப்பு அரிசி எனப்படும் கைக்குத்தல் அரிசியானது வெகு குறைவான தோல் நீக்கப்பட்டது. நெல்லின் வெளிப்புற தோலை நீக்கியப் பிறகு மிதமான பழுப்பு நிறத்தில் இருக்கும். இது தானியத்தின் சுவையுடன் வாயில் மெல்லக் கூடிய தன்மை கொண்டது. இவ்வகை அரிசி வெகுவாக தீட்டப்படா ததால், மிகுந்த சத்துள்ளதாக இருக்கும். ஆனால் இதை சமைப்பதற்கு சாதாரண அரிசியை விட, சிறிது அதிக நேரம் அதிகமாகும்.

கைக்குத்தல் அரிசிச் சோறு ஒரு முழு தானிய உணவு. இதில் சத்தான வைட்டமின் பி, பாஸ்பரஸ், செலினியம், மாங்கனீசு, பொட்டாசியம், மெக்னீசியம் போன்றவை உள்ளன. மேலும் இதில் உடல் எடையைக் குறைக்கும் நார்ச்சத்து மற்றும் ஃபைட்டோ நியூட்ரியண்ட்ஸ் சத்துக்கள் (Phytonutrients) மிகுதியாக உள்ளது. இப்போது இந்த கைக்குத்தல் அரிசியை சாப்பிட்டால், என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போமா!!!

பெருங்குடல் புற்றுநோய்

கைக்குத்தல் அரிசியில் செலினியம் இருப்பதால். பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறைக்கப்படுகிறது. இந்த அரிசியில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால், புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயனங்களை இரைப்பை குடல் பகுதிகளில் தங்கவிடாமல் பாதுகாக்க உதவும். இதனால் பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.

மார்பக புற்றுநோய்

கைக்குத்தல் அரிசியில் உள்ள பைட்டோ நியூட்ரியண்ட்டான லிக்னான் (Phytonutrients Lignan) மார்பக புற்றுநோய் மற்றும் இதய நோய்க்கு எதிராக தற்காத்துக் கொள்ள உதவுகிறது. வயதான பெண்களிடம் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் கைக்குத்தல் அரிசிச்சோறு போன்ற முழு தானிய உணவுகள் சாப்பிடும் போது enterolactone அளவுகளை, அதிகரித்து, மார்பக புற்றுநோய் அபாயத்தை குறைப்பதாக நிரூபணமாகியுள்ளது.

கொழுப்பை குறைக்கிறது

கைக்குத்தல் அரிசியின் தவிட்டில் கிடைக்கும் எண்ணெய், உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் என்று அறியப்படுகிறது. இந்த அரிசியில் எல்டிஎல் (LDL) கொழுப்பை குறைக்க உதவும் நார்ச்சத்து உள்ளது.

இதய நோய்

நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், கைக்குத்தல் அரிசிச்சோறு, இதய நோய் அபாயத்தை குறைக்க உதவுகிறது. டெம்பிள் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், கைக்குத்தல் அரிசிச்சோறு சாப்பிட்டால், இரத்த அழுத்தம் குறையும் என்று தெரிவிக்கின்றனர். மேலும் இரத்தக் குழலில் பிளேக் உருவாகும் அபாயத்தையும் குறைக்கும். இதனால் இதய நோய் வருவதை குறைக்க முடியும் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உடல் எடையை பராமரிக்க

கைக்குத்தல் அரிசியில் அதிக நார்ச்சத்து இருப்பதால், உணவின் கலோரி அளவை கட்டுப்படுத்தி, அதிக உணவை உட்கொள்வதை தடுக்கிறது. ஹார்வர்ட் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், கைக்குத்தல் அரிசிச்சோறு போன்ற நார்ச்சத்து அதிகம் நிறைந்த உணவை சாப்பிட்ட பெண்களின் உடல் எடை குறைகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மலச்சிக்கலை தடுக்க

இந்த அரிசியின் உயர் நார்ச்சத்தினால், இது உணவை செரிக்க பெரிதும் உதவியாக இருக்கிறது. இதனால் மலச்சிக்கலை தடுத்து, ஆரோக்கியமான குடல் இயக்கங்களை பெறலாம்.

நீரிழிவை கட்டுப்படுத்த கைக்குத்தல் அரிசியில் உள்ள நார்ச்சத்து, இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி, இரண்டாம் வகை (Type 2) நீரிழிவு நோயை சீராக்க பயனுள்ளதாக இருக்கும்.

ஆரோக்கியமான எலும்புகள்

கைக்குத்தல் அரிசியில் ஆரோக்கியமான எலும்புகளை பராமரிக்க தேவையான மெக்னீசியம் அதிக அளவில் உள்ளது. ஒரு கிண்ணம் கைக்குத்தல் அரிசிச் சோற்றில் ஒரு நாளைக்கு பரிந்துரைக்கப்படும் மெக்னீசியம் அளவில் கிட்டத்தட்ட 21% இருக்கிறது. மேலும், மெக்னீசியத்தால், எலும்புகள் கால்சியம் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்தினை உறிஞ்சுகிறது.

ஆசுதுமா

மெக்னீசியம் நிறைந்த கைக்குத்தல் அரிசி, ஆஸ்துமாவைக் குறைக்கிறது. பல ஆய்வுகள், கைக்குத்தல் அரிசியில் உள்ள மெக்னீசியம், நோயாளிகளிடம் உள்ள ஆஸ்துமாவின் தீவிரத்தை குறைக்க உதவும் என்று தெரிவிக்கின்றன. மேலும் இந்த அரிசியில் உள்ள செலினியம், ஆஸ்துமவிற்கு எதிரான நன்மை தரும்.

பித்தக்கற்கள்

கைக்குத்தல் அரிசி போன்ற கரையாத நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வதால் பெண்களுக்கு பித்தக்கற்கள் உருவாதலை குறைக்க உதவுகிறது என்று இரப்பை குடலியலுக்கான அமெரிக்க இதழில் வெளியான ஒரு ஆய்வு கூறுகிறது,

ஆரோக்கியமான நரம்பு மண்டலம்

கைக்குத்தல் அரிசி, ஆரோக்கியமான நரம்பு மண்டலத்திற்கு தேவையான மாங்கனீசு நிறைந்தது. இதிலுள்ள ஊட்டச்சத்துகள் கொழுப்பு அமிலங்களை உருவாக்கி, பாலியல் ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது.

உணவு முறை தேவைகள்

உணவு முறை வழிகாட்டி நாளொன்றுக்கு முழு தானியங்கள் 3 சேவைகள் உட்கொள்ள பரிந்துரைக்கிறது. ஒரு 1/2 கிண்ணம் கைக்குத்தல் அரிசிச்சோறு, அந்த மூன்று சேவைகளில் ஒன்றிற்கு சமம். அதனால் தினசரி உணவின் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய கைக்குத்தல் அரிசிச்சோறு ஒரு நல்ல உணவு.

உங்கள் குழந்தை உயரமாக வேண்டுமா?

குழந்தைகளின் உயர குறைபாடு காரணமாக சில விளையாட்டுகளில் பயிற்சி பெறவோ, பங்கேற்கவோ இயலாது. குறிப்பிட்ட உயரமில்லாவிட்டால் மாநில, மத்திய அரசிலுள்ள சில வேலை வாய்ப்பு பாதிக்கும். மற்ற தகுதிகள் இருந்தும் உயரமில்லாததால் விருப்பப்பட்ட பணி கிடைக்காமல் போகும். பெண்களில் திருமண வாய்ப்பு பாதிக்கப்படும். உயரம் சமூக அந்தஸ்தாகவும் உள்ளதால் தன்னம்பிக்கை குறைவு ஏற்படும். குழந்தைகளின் உயர குறைபாட்டிற்கு ஊட்டச்சத்து குறைபாடு, சந்ததிரீதியான மரபணு, ஹார்மோன் குறைபாடு காரணமாக இருக்கிறது.

இதில் ஊட்டச்சத்து உணவு சாப்பிட்டால் உயரம் கிடைத்து விடும், சந்ததிரீதியான உயர குறைபாட்டை ஓரளவு தவிர்க்கலாம். பெரும்பாலானோருக்கு ஹார்மோன் குறைபாடு உள்ளதால், அதற்கு ஹார்மோன் சிகிச்சை மூலம் உயரத்தை அதிகப்படுத்தலாம். பொதுவாக பிறந்த குழந்தை 50 செமீ உயரம் இருக்க வேண்டும். பின்னர் 3 ஆண்டுகள் வேகமான வளர்ச்சி இருக்கும். 3 வயது முதல் 10 வயது வரை மிதமான வளர்ச்சி இருக்கும். 11 முதல் 16 வயது வரை மீண்டும் வேகமான வளர்ச்சி இருக்கும். 18 வயதிற்குள் உயர வளர்ச்சி முற்று பெறும்.

பெண்கள் வயதுக்கு வந்த பின்னர் 4 ஆண்டுகள் மட்டுமே வளர்ச்சி இருக்கும். அதற்குள் ஆண், பெண்கள் சராசரியாக ஒருவரின் உயரம் 155 செமீ முதல் 175 செமீ வரை இருக்கிறது. குழந்தை பிறந்தது முதல் உடல் எடையை கணக்கிடும் பெற்றோர் உயரத்தை கணக்கிடுவதில்லை. தகுந்த உயரம் உள்ளதா என்பதை குழந்தை பருவத்தில் கண்டறிந்தால் உயர குறைபாடு தெரியவரும். பின்னர் மருத்துவமனையில் ஹார்மோன் குறைபாட்டை கண்டறியலாம். ஹார்மோன் ஊசி மூலம் உடலின் உயர வளர்ச்சிக்கு சிகிச்சை எடுக்கலாம். உடலின் உயர வளர்ச்சி முற்றுப்பெற்ற பின்னர் ஹார்மோன் சிகிச்சைக்கு சென்றால் ஹார்மோன் சிகிச்சை பலனளிக்காது.

6 மாதத்திற்கு ஒரு முறை உயரத்தை சரிபார்க்க வேண்டும். குழந்தை பருவத்திலேயே உயர குறைபாட்டை கண்டறிந்து சிகிச்சை பெறும் விழிப்புணர்வை பெற்றோர் பெற வேண்டும். இதை தவிர்க்க குழந்தை பருவத்திலேயே ஹார்மோன் குறைபாட்டை கண்டறிய வேண்டும். ஹார்மோன் குறைபாடு இல்லாமல் சிலருக்கு சந்ததி காரணமாக உயர குறைபாடு இருக்கும். அவர்களுக்கும் ஹார்மோன் ஊசி மூலம் உயர வளர்ச்சியை ஓரளவு எட்டலாம். போதிய உயரம் உள்ளவர்கள் மேலும் உயரம் அடைய விரும்பினாலும் ஹார்மோன் சிகிச்சை மூலம் உயரத்தை அதிகப்படுத்தலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

அலறவைக்கும் ஆசுதுமா.. என்ன தீர்வு?

நகரமயமாக்கலின் காரணமாக பல்கிப்பெருகியுள்ள நோய்களில், இன்றைய நிலையில் ஆசுதுமாதான் முக்கியமான இடத்தில் உள்ளது. இரவு முழுவதும் உறங்க முடியாமல், மூச்சுவிடவே சிரமப்பட வைக்கும் ஆசுதுமாவைப் பற்றித் தெரிந்து கொண்டால் முடிந்த வரையில் ஆஸ்துமா வராமல் தடுக்கலாம்.

ஆசுதுமா என்றால் என்ன?

ஆசதுமா என்பது நுரையீரலைத் தாக்கக் கூடிய ஒரு நோய். சுவாசக் குழாயில் உள்ள தசைகள் வீங்கிப்போய், சுவாசிப்பதே சிரமமாக இருக்கும்.

ஆசுதுமா எதனால் வருகிறது?

1. சிகரட் புகை

2. கயிறு துகள், மரத்தூள்

3. செல்லப் பிராணிகளின் முடி

4. சுவாசிக்கும் காற்றில் இருக்கும் மாசு

5. அடிக்கடி மாறும் காலநிலை

6. மன அழுத்தம்

7. வாகனங்களில் இருந்து வெளிவரும் கரும்புகை

8. சளித்தொல்லை

9. தும்மல் பிரச்னை

10. பரம்பரை காரணம் (குடும்பத்தில் யாருக்கேனும் இருந்தால் வரலாம்).

அறிகுறிகள்…

1. மூச்சு இளைத்தல் (வீசிங் பிரச்னை)

2. அடிக்கடி இருமுவது, தும்முவது போன்ற பிரச்னைகள்

3. முகம், உதடு ஊதா நிறத்தில் மாறுவது

4. அடிக்கடி, திடீரென ஏற்படும் சுவாசக் கோளாறு

5. பயம், பதட்டம் காரணமாக அடிக்கடி வியர்த்தல்

6. நெஞ்சுவலி

7. சீரற்ற இதயத் துடிப்பு

 

தீர்வு…

=> மருத்துவர் அறிவுரையோடு ‘இன்ஹேலர் தெரப்பி’ மற்றும் மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

=> சுத்தமாக இருத்தல் மிகவும் அவசியம்.

=> சூடான உணவுகளை மட்டும் உட்கொள்ள வேண்டும்.

=> தூசி இல்லாத இடத்தில் வசிக்க வேண்டும்.

=> குளிர்பானங்கள், ஹோட்டல்களில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

=> தொடர்ந்து அடிக்கடி உடல் நிலையைப் பரிசோதனை செய்து, மருத்துவரின் அறிவுரையை பின்பற்ற வேண்டும்.

தடுக்கும் வழிமுறைகள்…

1. படுக்கை அறையை சுத்தமாக வைத்துகொள்ளுங்கள். குறிப்பாக தலையணை உறை, பெட் ஷீட் ஆகியவற்றை அடிக்கடி மாற்ற வேண்டும்.

2. வீட்டில் தூசி படியவிடாமல் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். தூசிகளை அகற்றும்போது முகத்தில் மாஸ்க் கட்டிக்கொள்ள வேண்டும்.

3. ஏசி அளவை நார்மலாக வைத்திருக்க வேண்டும். அறைக்கு வெளியே உள்ள வெப்ப நிலையைவிட, அறையில் அதீத குளிரில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.

4. சுத்தமான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். வீட்டில் கரப்பான் பூச்சி, மூட்டை பூச்சிகள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

5. இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது மூக்கை மறைத்தவாறு முழுமையாக ஹெல்மெட் அணிய வேண்டும், அல்லது மாஸ்க் கட்டிக்கொள்ள வேண்டும்.

6. தொழிற்சாலை அல்லது வேலை பார்க்கும் இடங்களில் தூசு அதிகம் இருந்தால் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்.

7. சிகரெட் பிடிக்கவும் கூடாது;  சிகரெட் புகைப்பவர்கள் அருகில் நிற்கவும் கூடாது.

8. வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளால் ஒவ்வாமை இருந்தால் அந்த பிராணியை முடிந்த வரையில் தனி அறையில் வைத்திருக்க வேண்டும் அதன் அருகில் செல்ல கூடாது.

9. வருடம் ஒருமுறை சுவாச பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

10. எந்த பொருளால் அலர்யி ஏற்பட்டாலும் அதனை தவிர்க்க வேண்டும்.

இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால், ஆசுதுமா பிரச்னை வராமல் தடுக்கலாம். ஏற்கெனவே இருப்பவர்கள், அது தீவிரம் ஆகாமல் பார்த்துக்கொள்ளலாம்.