உக்ரைன் நாட்டில் ஞாயிற்றுக்கிழமை நடந்த அதிபர் தேர்தலில், ஜனாயகம் சிறப்பாக புலனாகியது என்று அனைத்துலக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். மக்களின் தீர்ப்பை மதித்து, அதிகாரத்தை முறைப்படி கையளிக்க உக்ரைனியத் தலைவர்கள் தயாராக வேண்டும் என்று ஐரோப்பிய பாதுகாப்பு கூட்டுறவுக்கான அமைப்பு கேட்டுள்ளது.
அந்த அமைப்பின் தலைவரான ஜோஸ் சோயரஸ் கருத்து வெளியிடும் போது உக்ரையினின் தேர்தல் ஆணையம் ஒளிவு மறைவின்றி பாரபட்சமற்ற முறையில் செயற்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய எதிர்கட்சித் தலைவரான விக்டர் யானுகோவிட்ச் மிகச்சிறு வாக்கு வித்தியாசத்தில் வெற்றியடைந்து கொண்டிருக்கிறார் என்று உக்ரையின் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.