குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

துடிக்காத இதயத்தைத் துடிக்க வைத்த மருத்துவச் சாதனை

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மருத்துவர்கள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில், துடிக்காத இதயத்தை வெற்றிகரமாக பயன்படுத்தி சாதனை படைத்துள்ளனர்.

பொதுவாக இதய மாற்று அறுவை சிகிச்சைகளில் மருத்துவர்கள் துடித்துக்கொண்டிருக்கும் இதயத்தையே பயன்படுத்தி வந்தனர். ஆனால், உலகில் முதன்முறையாக சிட்னியின் செயின்ட் வின் சென்ட் மருத்துவமனை மற்றும் விக்டர் சாங் இருதய ஆராய்ச்சி மய்யம் ஆகியவை இணைந்து தயாரித்துள்ள ஒரு புதிய செயல்பாட்டின் மூலம், துடிப்பது நின்று 20 நிமிடத்திற்கு பிறகும் கொடை செய்யப்பட்ட இதயத்தை வெற்றிகரமாக மற்றொரு வருக்கு பொருத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுவரை இந்த செயல்பாட்டின் உதவியால் மூன்று பேருக்கு வெற்றிகரமாக இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இந்த முறையில் சிகிச்சை பெற்றவர்களில் இருவர் நலமுடன் இருப்ப தாகவும், மூன்றாவது நபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சாதனை செயல்பாடு குறித்து நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக் கழகத்தின் இணை பேராசி ரியர் குமுத் டித்தால் கூறி யதாவது:- உலகிலேயே மூவருக்கு தான் இந்த சிகிச்சை மேற் கொள்ளப்பட்டுள்ளது. இந்த முறையில் கொடை செய்யப்பட்ட இதயம் கார்ட் இன் ஏ பாக்ஸ் என்னும் ஒரு சிறிய இயந்திரத்தினுள் கதகதப்பான சூழலில், பாதுகாப்பான திரவத்தில் வைக்கப்படுகிறது.

 

இவ்வகையில் பராமரிக்கப்படும் இதயங்கள் பாதுகாப்பாக உள்ளன என்பது மருத்துவர்களுக்கு உறுதியாக தெரிவதால், நோயாளிகளுக்கு இம்முறை உதவியாக உள்ளது. இன்னும் 5 ஆண்டுகளில் நாம் அதிக அளவில் இயந்திரங்கள் மூலம் இதயத்தை பாதுகாக்கும் முறையை பின்பற்ற துவங்கியிருப்போம்.

 

இவ்வாறு அவர் கூறினார்.